Saturday, December 31, 2011

நில அளவை குறிப்புகள்

http://www.homeiown.com/conversion-acres-hectares-feet-yards-calc.html

http://realestate-chennai.com/realestatechennai-landcalculator.htm

தஞ்சை மாவட்டத்தில் இக்காலத்திலும் நிலத்தை 'வேலி' என்னும் அளவையால்
குறிப்பிடுகின்றனர்.

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

Thursday, December 15, 2011

சொத்து வரி

சொத்து வரியை எப்படி எங்கு கட்டுவது .

உங்களுடைய சொத்து நிலமாக இருக்கிறதா அல்லது வீடு, வணிகவளாகம் போன்ற
கட்டிடங்களாக உள்ளதா என்பதைப் பொறுத்து சொத்து வரி அமையும். உங்களுடைய
சொத்து மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்ற அமைப்புகளின் கீழ்
வரும்.உங்களுடைய சொத்து வரியை நிர்ணயம் செய்வது மேற்கண்ட அமைப்புகள்தான்.
நீங்கள் வரியை அந்தந்த அலுவலகங்களில் செலுத்த வேண்டும்.

உங்களுடைய சொத்து விவசாய நிலமாக இருந்து அதை நீங்கள் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் பட்சத்தில் வருவாய்த்துறையில் வரி நிர்ணயம் செய்யப்படும்.
இதை நீங்கள் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் செலுத்தலாம்.

உயில்

http://www.nilacharal.com/ocms/log/07181106.asp
http://www.nilacharal.com/ocms/log/07251103.asp
http://www.nilacharal.com/ocms/log/08011102.asp


வாழ்க்கையின் எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் உள்ள பொதுவான ஆசை, கனவு
சொந்த வீடு வாங்குவது தான். சொந்த வீட்டில் இருப்பதில் உள்ள மகிழ்ச்சியை
தானும் அனுபவித்துக் கொண்டு தம்முடைய சந்ததியினரும் அனுபவிக்க வேண்டும்
என்பது தான் நோக்கம். குடியிருப்பதற்கு சொந்த வீடு வாங்கிய பிறகும் மற்ற
இடங்களில் சொத்து வாங்குவது கண்டிப்பாக நாம் அனுபவிப்பதற்காக அல்ல.
நம்முடைய குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்காகவும்
அல்லது தமக்குப் பிறகு அந்த சொத்து குழந்தைகளுக்குப் போய் சேர்ந்து
அவர்கள் வாழ்க்கைக்கு அது உதவ வேண்டும் என்பது தான். காரணம் எதுவாக
இருந்தாலும் நாம் குடியிருக்கும் வீடு உட்பட நமக்கு சொந்தமான எல்லா
சொத்துக்களும் நம்முடைய காலத்திற்குப் பிறகு நம்முடைய வாரிசுதாரர்களுக்கு
போய் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சேர வேண்டும் என்பது தான் எல்லோருடைய
நோக்கமாக இருக்கும்.

நாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் நம் காலத்திற்குப் பிறகு நம்முடைய
வாரிசுதாரர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் சேருவதற்கு நாம் செய்ய
வேண்டிய வழிமுறைகள் சிலவற்றில் முக்கிய பங்கு வகிப்பது "உயில்" என்பது
தான். நம்முடைய சொத்து, நம் காலத்திற்கு பிறகு நம் வாரிசுகளில் யார்
யாருக்கு எந்தெந்த சொத்து போக வேண்டுமென்று நாம் தெளிவாக முறைப்படி எழுதி
வைப்பது தான் உயில்.

உயில் என்றதுமே பலருக்கும் பல வழிகளில் அச்சம் வருகிறது.

1. பொதுவாக கிராமப்புரங்களில் உள்ளோர் உயில் எழுதி விட்டாலே இறந்து
விடுவோம் என்ற நம்பிக்கை.

2. அதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்பு.

3. நாம் இறந்த பிறகு தான் சொத்து உரியவர்களுக்குப் போய் சேரும் என்பதால்
அவர்களால் தம்முடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம்.

மேற்கூறிரிய காரணங்களாத்தினால் பலர் உயில் எழுத யோசிப்பது உண்டு. மேலும்
சிலர் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறோம். அதனால் இப்பொழுது
உயில் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். உயில்
எழுதாவிட்டால் நம் காலத்திற்குப்பிறகு நம்முடைய சொத்து நாம்
விருப்பப்பட்டவர்களுக்கு போய் சேராமல் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதை பல உதாரணங்கள் மூலம் தான் விளக்க முடியும்.

திருநெல்வேலி அருகில் ஒருவருக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கிறது. அவருக்கு
இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும். எல்லோருக்கும் திருமணம்
ஆகி விட்டது. அவருக்கு பதினோரு பேரக்குழந்தைகள். அதில் மூன்று பேர்
பதினெட்டு வயது நிரம்பியவர்கள்.

அவருக்கு வயது அறுபத்து இரண்டு. அவரை உயில் எழுதச்சொல்லி அவர் உறவினர்
ஒருவர் சொல்லியும் மறுத்து விட்டார். "எனக்குப்பிறகு இந்த 40 ஏக்கர்
சொத்தும் என்னுடைய இரண்டு ஆண் பிள்ளைகளுக்குத்தான்." நான் என்னுடைய பெண்
பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர்களின் திருமணத்தின் போதே
செய்து விட்டேன். அவர்களிடமும் இந்த 40 ஏக்கரும் எனக்குப் பிறகு
உங்களுடைய சகோதரர்களுக்குத்தான் என சொல்லிவிட்டேன். என்னுடைய
பெண்பிள்ளைகள் என் மேல் மிகுந்த பாசம் உள்ளவர்கள், அதனால் என்
காலத்திற்கு பிறகும் என்னுடைய பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள் என
சொன்னார். பெண் பிள்ளைகளிடம் தாம் சொல்லிவிட்ட காரணத்தினாலும் அவர்களும்
சம்மதம் தெரிவித்த காரணத்தினால் உயில் தேவையில்லை என நினைத்தார். அவருடைய
இரண்டு ஆண் பிள்ளைகளுமே அப்பாவைப்போல சகோதரிகள் மீது அதிக பாசம்
கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர் இறந்த பின்பு நிலைமை தலைகீழாக மாறுகிறது. அப்பா இறந்த ஆறு மாத
காலத்திற்குப் பிறகு தன் சகோதரிகளை ஆண் பிள்ளைகள் இருவரும் தங்கள்
பெயரில் சொத்துகளை மாற்றுவதற்கு உள்ள ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி அழைக்கிறார்கள். நான்கு சகோதரிகளும்
வெவ்வேறு இடங்களில் வசித்து வருவதால் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்
எல்லோருக்கும் வசதியான ஒரு நாளில் வருகிறோம் என்ற பதில்
சகோதரிகளிடமிருந்து வருகிறது. ஒரு மாத காலம் முடிந்த பின்பும் அவர்கள்
வரவில்லை. திரும்ப அழைக்கும் போது இன்னும் ஒரு மாத கால அவகாசம்
கேட்கிறார்கள். அந்த காலக்கெடுவும் முடிந்த பின்பும் அவர்கள் வரவில்லை.
மூத்த சகோதரி, ஒரு விடுமுறை நாளில் நாம் எல்லோரும் உட்கார்ந்து பேசி
முடிவெடுப்போம் என்று சொல்கிறார். இதில் பேச என்ன இருக்கிறது என்று
நினைக்கும் சகோதரர்கள், சகோதரிகளின் விருப்பப்படி எல்லோரும் உட்கார்ந்து
பேசுகிறார்கள். பேசும் போது அவர்களுடைய எண்ணங்கள் திசை மாறுகிறது. அப்பா
எங்களுக்கு செய்திருக்கிறார், ஆனால் இந்த சொத்தில் பத்தில் ஒரு பங்கு
மதிப்பு கூட இருக்காது. அதனால், எங்கள் நான்கு பேருக்கும் தலா ஐந்து
ஏக்கர் வீதம் கொடுத்துவிட்டு மீதி இருபது ஏக்கரை நீங்கள் இருவரும்
பிரித்துக்கொள்ளுங்கள் என்று பதில் வருகிறது. அப்பாவிடம் நீங்கள் இப்படி
சொல்லவில்லையே என்று அவர்கள் கேட்டதற்கு, இப்போது நிலைமை அப்படி இல்லை,
நீங்களும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதில்
இரண்டு சகோதரிகள் எங்களுடைய கணவன்மார்கள் தான் எங்களை தொந்தரவு செய்து
கேட்கச்சொல்கிறார்கள் என்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச்
சொல்கிறார்கள். எவ்வளவோ எடுத்துக் கூறியும், போராடிப்பார்த்தும்
சகோதரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் சகோதரிகள் நினைத்தது
போலவே ஒவ்வொருக்கும் ஐந்து ஏக்கர் இடத்தை கொடுத்துவிட்டு மீதி உள்ள
இருபது ஏக்கரில் ஒவ்வொருவரும் பத்து ஏக்கர் எடுத்துக் கொண்டார்கள்.

இது நியாயம் தானே என்று பலர் சொல்வார்கள். பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில்
பங்கு இருக்கிறது என்று வாதாடுபவர்களும் உண்டு. நாம் விவாதித்துக்
கொண்டிருப்பது நியாயத்தைப் பற்றியது அல்ல. நாம் சம்பாதித்த சொத்து நாம்
விருப்பப்பட்டவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நம்
காலத்திற்குப் பிறகு போய் சேர்ந்ததா என்பது தான்.
--------------------
சென்னையில் ஒருவருக்கு வெவ்வேறு இடங்களில் மூன்று சொத்துக்கள்
இருக்கின்றன. அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும்
இருக்கிறார்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் திடீரென்று
மாரடைப்பினால் இறந்து விட்டார். அவர் உயில் எழுதவில்லை. அவருடைய மனைவி
ஏற்கனவே இறந்து விட்டதால், அவருடைய வாரிசுதாரர்கள் பிள்ளைகள் மூவரும்
தான். மூன்று இடங்களில் உள்ள சொத்துக்களுக்கும் இவர்கள் மூவரும்
உரிமையாளர் ஆவார்கள். மூவரும் சொத்தை எவ்வாறு பிரிப்பது என்பதைப்பற்றி
ஒரு நாள் அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது இளைய ஆண் பிள்ளையும் பெண்ணும்
ஆளுக்கு ஒரு சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால்
அதற்கு மூத்தவர் ஒவ்வொருறு சொத்து மதிப்பும் வித்தியாசப்படுகிறது என்று
கூறி ஒத்துக் கொள்ளவில்லை. அம்மூன்று சொத்துக்களில், விலை மதிப்பு
கூடுதலாக உள்ள சொத்தை மூத்தவரை எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். மற்ற இரு
சொத்துக்களில் தாங்களிருவரும் ஒவ்வொன்றை எடுத்துக் கொள்கிறோம் என்று
சொல்கிறார்கள், அதற்கும் அந்த மூத்தவர் மறுக்கிறார். அம்மூன்று
சொத்துக்களையும் விற்று சமமாக மூவரும் பணத்தைப் பிரித்துக் கொள்ளலாம்
என்று கூறுகிறார். ஆனால் இளையவரோ அந்த சொத்துக்களின் மதிப்பு
பிற்காலத்தில் நன்கு கூடும், ஆகையால் அதை தற்போது விற்கக்கூடாது என்று
கூறுகிறார். பெண் பிள்ளையோ, அப்பா சம்பாதித்த சொத்தை நான் இருக்கும்வரை
விற்கப்போவதில்லை, அதனால் மூன்றில் ஏதாவது ஒரு சொத்தை எனக்கு
கொடுத்துவிடுங்கள் என கேட்கிறார்.

இவர்களின் தந்தை உயிருடன் இருந்த போதே சொத்துக்களை அவர் விருப்பப்படி
யார் யாருக்கு எந்த சொத்து என்று உயில் எழுதி வைத்திருந்தால், இப்போது
மூன்று பிள்ளைகளும் எந்த பிரச்சனையும் இன்றி அவரவர்களுடைய சொத்தை
எடுத்துக் கொண்டிருக்கலாம். மேலும் இந்த சொத்து விஷயத்தில் தற்போது
இவர்களுக்குள் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. அப்பா உயிருடன் இருந்தபோது
ஒற்றுமையுடன் இருந்த மூவரும் தற்போது ஒருவருக்கு ஒருவர்
பேசிக்கொள்வதில்லை. இதைத் தெரிந்து கொண்ட அவர்களுடைய உறவினர்கள், தாங்கள்
பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனையைத் தீர்த்துவைப்பதாகக் கூறி இவர்கள்
குடும்பப் பிரச்சனையில் தலையிடுகிறார்கள். தந்தை கஷ்டப்பட்டு இந்த
சொத்துக்களைச் சேர்த்தது, தமது பிள்ளைகளின் குடும்பத்தின்
எதிர்காலத்திற்குப் பயன்படும் என்று தான். ஆனால், நிலைமை இப்போது
தலைகீழாக மாறி இருக்கிறது. சொத்து இல்லாமல் இருந்திருந்தால் கூட
ஒற்றுமையாக இருந்திருப்பார்கள் என்று பலரும் பேசுமளவிற்கு நிலைமை
உருவாகிவிட்டது.
-------------------
உயிலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் நாம் பதிவு செய்வது நல்லது. சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லக்
கூடிய நிலையில் உள்ளவர்கள் உயிலை பதிவு செய்துவிட வேண்டும்.
முடியாதவர்கள் வீட்டில் இருந்தவாரே உயில் எழுதலாம். உயில் எழுதுவதற்கு
முன்பு முக்கியமான சிலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

1. நம்மிடம் உள்ள எல்லா சொத்துக்களையும் பட்டியலிட வேண்டும்.

2. சொத்துக்களின் முழு விவரத்தையும் அதாவது சர்வே எண், அளவு, பட்டா எண்,
கிராமம், கிரயப்பத்திர எண் போன்றவற்றை தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும்.

3. எந்தெந்த சொத்துக்களை யார் யாருக்கு கொடுக்கப் போகிறோம் என்பதையும்
தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும்.

4. யார் யாருக்கு கொடுக்கிறோமோ அவர்களின் பெயர், உறவு முறை
முதலியவற்றையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

5. அதே போல் ஏதாவது ஒரு சொத்தை பிரிக்க நேரிடும் போது அது எவ்வாறு
பிரிக்க வேண்டும் அதில் எந்த பக்கம் யாருக்கு சேரவேண்டும் என்பதும்
தெளிவாக குறிப்பிட வேண்டும். பொதுவாக குறிப்பிடக் கூடாது. அதாவது சொத்தை
இரண்டாக பிரித்து சரிபாகமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று
குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

6. அதே போல வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டை பிரிக்க வேண்டிய சூழல்
இருந்தால் எந்த பகுதி யார் யாருக்கு என்றதையும் தெளிவாக குறிப்பிட
வேண்டும். எடுத்துக்காட்டாக கீழ்தளம் ஒருவருக்கு, முதல் தளம் ஒருவருக்கு
என்று தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

உயில் தெளிவாக எழுதாவிட்டாலும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

திருச்சியில் ஒருவருக்கு 6 ஏக்கர் நிலமும் இரண்டு வீடுகளும் இருந்தனது.
அவருக்கு இரண்டு ஆண் வாரிசுகள். அவர் தன்னுடைய உயிலில் தமது
காலத்திற்குப் பிறகு இரண்டு வீடுகளைத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும்
என்று எழுதிவிட்டு ஆறு ஏக்கர் நிலத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொள்ள
வேண்டும் என எழுதிவிட்டார். அவர் காலத்திற்கு பிறகு அந்த ஆறு ஏக்கர்
நிலத்தை எப்படி இரண்டாக பிரிப்பது, அதாவது முன்புறம், பின்புறம் என்றா
அல்லது வலது, இடது என்று பிரிப்பதா என்ற குளறுபடி. ஆறு மாத காலத்திற்கு
பிறகு உறவினர்கள் எல்லாம் சேர்ந்து பெரும் பிரச்சனைகளுக்கிடையே அதை
தீர்த்து வைத்தார்கள்.

சென்னையில் ஒருவருக்கு மூன்று கிரவுண்ட் நிலம் இருந்தது. அவர் உயில்
எழுதும் போது அவருடைய ஒரு மகனுக்கும் மகளுக்கும் அது சொந்தம் என எழுதி
வைத்து விட்டார். இதிலும் எப்படி பிரிப்பது என்ற பிரச்சனை தான்
ஏற்பட்டது. தீர்வு ஏற்படாத நிலையில் அந்த இடத்தை விற்று அந்தப் பணத்தை
இருவரும் சமமாக பிரித்துக் கொண்டார்கள். உயில் தெளிவாக இல்லாத
காரணத்தினால் ஒரு நல்ல இடத்தை விற்க வேண்டிய நிலை.

இன்னும் சிலர் செய்யும் தவறு உயில் எழுதும் போது சில சின்ன சொத்துக்களை
சேர்க்க மறந்துவிடுகிறார்கள். தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட
கிராமத்தில் பல இடங்களில் 16 செண்ட், 7 செண்ட் என்பது போன்று இருபத்து
ஐந்து சர்வே எண்களில் மொத்தம் பதினோரு ஏக்கர் அளவு விவசாய நிலம்
இருந்தது. அவர் உயில் எழுதும் போது மூன்று சர்வே எண்களை விட்டு விட்டார்.
அவர் இறந்த பிறகு அவருடைய வாரிசுகள் அந்த விடுபட்ட இடத்தை கண்டுபிடித்து
விடுகிறார்கள். இப்போது அதை விற்க முற்படும் போது எல்லா வாரிசுகளும்
அதில் கையெழுத்து இட வேண்டும். மொத்தம் எட்டு வாரிசுதாரர்கள்.
ஒவ்வொருத்தரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அதில் மூவர்
வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இப்போது வெளிநாடுகளில் வசிக்கும்
எல்லோரும் ஊரில் உள்ள ஒருவருக்கு பவர் ஆ•ப் அட்டார்னி கொடுத்து விற்க
வேண்டிய சூழ்நிலை. இது தேவையில்லாத ஒன்று தான்.

சில சமயங்களில் உயில் எழுதும் வயதானவர்கள் தங்களுடைய பேரப் பிள்ளைகளுக்கு
சொத்து எழுதி வைக்கும் போது வீட்டில் அழைக்கும் செல்லப் பெயரை
குறிப்பிடுகிறார்கள். பெயர் சரியாக குறிப்பிடவேண்டும் என்ற
முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

திருநெல்வேலியில் எண்ன்பது வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு ஐந்து பிள்ளைகள்
மற்றும் பதினான்கு பேரப்பிள்ளைகள். கணவரும் இறந்து விட்டார். நிறைய
இடத்தில் சொத்துக்கள் வைத்திருக்கும் அவர் எல்லோருக்கும் சொத்துக்களைப்
பிரித்து உயில் எழுதுகிறார். யாருக்குமே தெரியவேண்டாம் என நினைக்கும்
அவர் தமக்கு தெரிந்த டாக்குமென்ட் ரைட்டர் ஒருவரை வைத்து உயில்
எழுதுகிறார். அதில் அவருடைய பேரன்கள் இருவரின் பெயர் பால்ராஜ் மற்றும்
கதிர்வேல், ஆனால் குடும்பத்தில் அவர்கள் இருவரையும் குட்டி மற்றும் அப்பு
என்று செல்லமாக அழைப்பார்கள். உயில் எழுதும் போது இந்த செல்ல பெயர்க ைளயே
குறிப்பிட்டு எழுதுகிறார். அவர் இறந்த பின்பு உயிலை பார்க்கும்
உறவினர்கள் பெயர் மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இப்போது
அவர்கள் பெயரில் சொத்தை எப்படி மாற்றுவது என்று திகைத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு உயில் எழுதும் போது ஒவ்வொருவருக்கும்
கொடுக்க நினைக்கும் சொத்தை ஒவ்வொரு சொத்து விவரமாக (Schedule)
குறிப்பிட்டு உயில் எழுதுவது நல்லது.

எ.கா. மூன்று பேருக்கு உயில் எழுதும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள
சொத்தை முறையே Schedule A, Schedule B , Schedule C என குறிப்பிட்டுவது
நல்லது. உயில் எழுதும் போது Schedule A சொத்து ஒருவருக்கு Schedule B,
Schedule C மற்றவர்களுக்கு என தனித்தனியாக குறிப்பிட்டு விடலாம்

மேற்கண்ட எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு உயில் எழுதவேண்டும். வக்கீல்
மூலமாகவோ அல்லது டாக்குமென்ட் ரைட்டர் மூலமாகவோ அல்லது நன்றாக விவரம்
தெரிந்தவர் மூலமாகவோ உயில் எழுத வேண்டும்.

உயிலை முத்திரைத்தாளில் எழுதவேண்டிய அவசியம் இல்லை. பச்சைத்தாளில்
எழுதினால் போதுமானது. உயிலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யவிரும்புபவர்கள் சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ்
வருகிறதோ அங்கு தான் பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணனமாக Rs.50.00
(ரூபாய்.ஐம்பது) ம், கணினி கட்டணமாக Rs.100.00(ரூபாய்.நூறு)ம் செலுத்த
வேண்டும். வேறு எந்த கட்டணமும் இல்லை. சொத்துக்களின் அளவு, கைடு லைன்
வேல்யூ போன்றவற்றைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொத்துக்களின் மதிப்பு
எவ்வளவு இருந்தாலும் பதிவு செய்வதற்கு ஆகும் செலவு Rs.150.00
(ரூபாய்.நூற்று ஐம்பது) மட்டும் தான். மற்ற சொத்துக்களை பதிவு செய்யும்
போது பின்பற்றப்படும் முறை, அதாவது உயில் எழுதுபவரின் புகைப்படம்
ஒட்டப்பட்டு அவருடைய இடது கை பெருவிரல் கைரேகை வாங்கப்பட்டு இரண்டு
சாட்சிகளின் கையொப்பமும் வாங்கப்படும்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் சென்று பதிவு செய்ய முடியாதவர்கள் மேற்கண்ட
விஷயங்களைத் தெளிவாக பச்சைத்தாளில் குறிப்பிட்டு கீழே கையொப்பம் இட்டு
இடது கைபெருவிரல் ரேகை இட வேண்டும். இரண்டு சாட்சிகளின் கையொப்பமும்
வேண்டும்.

உயில் எழுதிய பிறகு தமக்கு வேண்டிய இருவரிடம் கட்டாயம் அதை தெரிவிக்க
வேண்டும். அப்படியென்றால் தான் அவர் இறந்த பிறகு உயில் உரியவரிடம் போய்
சேரும். உயில் எழுதியும் யாரிடமும் தெரிவிக்காமல் இருக்கும் பட்சத்தில்
சில சமயம் பயனில்லாமல் போவதுமுண்டு. சிலசமயங்களில் ஏதேனும் ஒன்றை
உறவினர்கள் தேடும் போது சில ஆண்டுகள் கழித்து உயில் கிடைத்த
நிகழ்ச்சிகளும் உள்ளன. ஒருவர் இறந்தபின்புதான், அந்த உயிலின்படி அவர்
யார் யாருக்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறாரோ அவர்கள் சொத்துக்கு
உரிமையாளர்கள் ஆவார்கள்.

உயிலின்படி தங்கள் பெயருக்கு சொத்தை மாற்ற விரும்புபவர்கள் கீழ்கண்ட
முறைகளை பின்பற்ற வேண்டும்.

சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று தங்கள் பெயருக்கு பதிவு செய்ய
வேண்டிய அவசியம் இல்லை.

உயில் எழுதியவரின் இறப்பு சான்றிதழ், உயிலின் நகல் மற்றும் உயில்
யாருக்கு எழுதியிருக்கிறாரோ அவருடைய ID Proof முதலியவற்றை
வருவாய்த்துறையில் சமர்பித்து பட்டா, சிட்டா முதலியவற்றை தங்கள்
பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் அந்த சொத்தை விற்க
நினைக்கும் பட்சத்தில் இந்த ஆவணங்களே போதுமானது.

NRI & PIO

http://www.nilacharal.com/ocms/log/02151017.asp
http://www.nilacharal.com/ocms/log/03291013.asp
http://www.nilacharal.com/ocms/log/06271102.asp
http://www.nilacharal.com/ocms/log/07111103.asp


நான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன். தமிழ் நாட்டில் சொத்து
ஒன்று வாங்க எண்ணுகிறேன். நான் என் பெயரில் வாங்க முடியுமா? நான் என்
தந்தைக்குப் பணம் அனுப்பி அவர் பெயரில் சொத்து வாங்கலாம் என்று
நினைக்கிறேன். இது சரியான வழியாக இருக்குமா?

நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் தமிழ்நாட்டில் உங்கள் பெயரில் சொத்து
வாங்க முடியாது என்பது தவறான எண்ணம். உங்கள் பெயரிலேயே சொத்து வாங்கலாம்.
அதற்கு ஒரு பவர் ஏஜண்ட்டை நீங்கள் தமிழ்நாட்டில் நியமிக்க வேண்டும்.
அதற்கான பத்திரம் தயாரித்து அதில் அமெரிக்காவில் உள்ள நோட்டரி பப்ளிக்
(Notary Public) ஒருவரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அதைத்
தமிழ்நாட்டில் உள்ள நீங்கள் நியமிக்கும் பவர் ஏஜன்ட் அனுப்பி, இங்குள்ள
ஏதாவது ஒரு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registration Office)
அட்ஜுடிகேஷன் (Adjudication) செய்ய வேண்டும். அட்ஜுடிகேஷன் என்பது
ரூ.100/- பணம் செலுத்தி அந்தப் பத்திரத்தைப் பதிவு செய்யும் முறையாகும்.
இந்த முறையின் மூலம் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம். உங்களுக்கு பதில்,
பத்திரத்திலும், சார் பதிவாளர் அலுவலகத்திலும் (Sub Registration Office)
உங்களுடைய பவர் ஏஜண்ட் கையொப்பமிடுவார்.

பவர் ஏஜண்டை நியமித்தால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று சில பேர்
நினைப்பதுண்டு. பவர் ஏஜன்ட் தவறான வழியில் செயல்பட்டு விடுவார்கள் என்று
சந்தேகிப்பதுண்டு. பவர் பத்திரம் சரியான முறையில் தயாரித்து விட்டால்
இந்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

பவர் ஏஜண்டை நியமிக்கும் போது அதற்கான பத்திரத்தில் நீங்கள் வாங்க
நினைக்கும் சொத்தின் முழு விவரத்தையும் கொடுத்து, குறிப்பிட்ட அந்த
சொத்தை வாங்குவதற்கு மட்டும் ஒருவரை பவர் ஏஜண்டாக நியமிக்க வேண்டும்.
அப்படி நியமிக்கும் போது உங்கள் பெயரில் சொத்து வாங்குவதற்கு மட்டும்தான்
அவர் பவரை உபயேகிக்க முடியும். மேலும், விற்பதற்கோ, அடமானம் போன்ற
காரியங்களை செய்வதற்கோ பவர் ஏஜண்டால் முடியாது.

நீங்கள் உங்கள் தந்தையையே பவர் ஏஜண்டாக நியமிக்கலாம். உங்கள் அப்பா
பெயருக்குப் பணம் அனுப்பி, அவர் பெயரில் சொத்து வாங்கும் போது அவருக்கு
வருமானத்திற்கான (Income Tax) வழிமுறை காட்ட வேண்டும். மேலும், உங்கள்
தந்தைக்கு திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் உங்களுக்காக
வாங்கப்பட்ட சொத்திற்கு அவருடைய எல்லா வாரிசுதாரர்களும் உரிமையாளர்களாகி
விடுவார்கள்.
----------------------
நான் இங்கிலாந்தில் வசித்து வருகிறேன். இந்தியாவில் உள்ள எனது சொந்த
ஊரில் எனக்காக சில சொத்துக்களை வாங்கியிருக்கிறேன். என் தந்தைக்கு
முறைப்படி பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருந்தேன். நான் இங்கிருந்து
ஊருக்கு பணம் அனுப்ப, என் தந்தை சொத்துக்களை வாங்கி அதைப் பராமரித்து
வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் இறந்துவிட்டதால், என் தாயார் எல்லாப்
பத்திரங்களையும் என்னிடம் தந்துவிட்டார். அவர் தற்போது என் சொத்துக்களைப்
பராமரித்து வருகிறார். எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்கிறார்கள்.
அண்ணன் இந்தியாவிலும் தம்பி என்னுடன் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள்.
நான் எனது காலத்திற்குப் பின் என் சொத்துக்களை என் பிள்ளைகளுக்குத்
தந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். என் பிள்ளைகள் இருவரும்
இங்கிலாந்தில்தான் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு என் சொத்தைப்
பராமரிப்பதற்கோ அல்லது விற்பதற்கோ எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க
நான் என்ன செய்ய வேண்டும்? தகுந்த ஆலோசனை தேவை. நன்றி!

- சாந்தி, இங்கிலாந்து

நீங்கள் இரு வகையான பிரச்சினைகளைப் பற்றி கேட்டிருக்கிறீர்கள்.

1) சொத்தை விற்பது

2) சொத்தைப் பராமரிப்பது

1) சொத்தை விற்பது :

நீங்கள் முறைப்படிதான் சொத்து வாங்கியிருக்கிறீர்கள். உங்கள்
காலத்திற்குப் பிறகு உங்கள் சொத்து உங்கள் குழந்தைகளுக்குத்தான் போய்ச்
சேரும். அதை உங்கள் குழந்தைகள் விற்க நினைக்கும்போது அவர்களே இங்கு வந்து
விற்கலாம் அல்லது இங்கு யாருக்கவது Power of Attorney கொடுத்து
விற்கலாம். ஆனால் உங்கள் இரு குழந்தைகளில் எந்தெந்த சொத்து யாருக்கு
என்பதை நீங்கள் முடிவு செய்து இப்பொழுதே அதன்படி உயில் எழுதி வைத்து
விட்டால் நல்லது. அதை நீங்கள் இங்கு வரும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில்
(Sub Registrar Office) பதிவு செய்துவிடவேண்டும். அப்படி செய்துவிட்டால்
உங்கள் காலத்திற்குப் பிறகு அந்தந்த சொத்துக்களின் உரிமம் உங்கள்
பிள்ளைகளுக்குத் தானாகவே போய்ச் சேர்ந்துவிடும். பின்பு அவர்களுக்கென்று
உள்ள சொத்தை அவர்கள் தங்களது விருப்பப்படி தனியாக விற்கலாம்.

அப்படியில்லை என்றால் உங்கள் எல்லா சொத்துக்களுக்கும் உங்கள் இரு
பிள்ளைகளும் உங்கள் கணவரும் உரிமையாளர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள்
மூவரும் வாரிசு சான்றிதழ் வாங்கவேண்டும். எந்த சொத்தை விற்றாலும் மூவரும்
சேர்ந்துதான் விற்கவேண்டும். அதனால் இப்பொழுதே முறைப்படி உயில் எழுதி
பதிவு செய்து விடுவது நல்லது.


2) சொத்தைப் பராமரிப்பது

எந்த வகையான சொத்து என்பதை வைத்துத்தான் பராமரிப்பு அமையும்

a) வீடு அல்லது Flat
b) நிலம்

a) வீடு அல்லது Flat என்றால் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

i) அரசாங்கத்திற்குக் கட்டவேண்டிய Corporation tax, Metro water tax, EB
அனைத்தும் உங்கள் பெயரில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். அனைத்து
வரிகளையும் தவறாமல் கட்டி விட வேண்டும்.

ii) வாடகைக்கு விட்டிருந்தால், agreement உங்கள் பெயரில்தான் இருக்க
வேண்டும். அதற்கான வாடகைப் பணம் உங்கள் பெயரில் வங்கியில் போடப்பட
வேண்டும். ஒரு வேளை நீங்கள் Power of Attorney மூலம் வாடகைக்கு
விட்டிருந்தால், வாடகைப் பணத்தை அவர் வாங்கி உங்கள் வங்கி
அக்கவுண்ட்டி-ல் போடவேண்டும். அவர்கள் மூலம் வரிகள் அரசாங்கத்திற்கு
செலுத்தப்பட்டால் அதற்கான நகலை (copy) நீங்கள் அனுப்பச் சொல்லி
பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அரசாங்க இணையதளங்கள் மூலம்
சரிபார்த்துக் கொள்ளவேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தவறாமல்
புதுப்பிக்க (renewal) வேண்டும்.

சொத்தை தரிந்தவர்கள்தான் பராமரிக்கிறார்கள் என்று சிறிதளவும் அலட்சியமாக
இருத்தல் கூடாது.

b) நிலமாக இருந்தால் கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:

i) உங்கள் பெயரில் பட்டா வாங்கி விட்டீர்களா என்பது மிக மிக முக்கியம்.
பட்டா வாங்காமலிருந்தால் முதலில் அதை வாங்கி விடுங்கள்.

ii)வருடத்திற்கு ஒரு முறை வில்லங்க சான்றிதழ் (EC) விண்ணப்பம் செய்து
வாங்கிக் கொள்வது நல்லது.


iii) உங்கள் நிலத்தைப் பராமரிப்பவர் அவ்வப்போது இடத்திற்குச் சென்று பார்வையிட்டு
யாராவது ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

iv) நீங்கள் இங்கு வரும் போது தவறாமல் நேரில் சென்று இடத்தை பார்வை
இடுங்கள்.

v) வரி கட்ட வேண்டிய இடமாக இருந்தால் தவறாமல் கட்டிவிடவேண்டும்.

vi) தாய்ப் பத்திரத்தை (Parent Documents) நிலம் வாங்கியவரிடமிருந்து
வாங்கி விட்டீர்களா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்
-----------------
NRI & PIO

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளி மரபை
சார்ந்தவர்களும் பணம் சேர்ந்தவுடன் முதலீட்டிற்காக முதலில்
தேர்ந்தெடுப்பது இந்தியாவில் உள்ள சொத்துகளில் முதலீடு செய்வது தான்.
குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக சொத்தின் விலை பல மடங்காக
உயர்வதால் வெளிநாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் இங்கு அதிகம்
நிலம் வாங்குகிறார்கள். ஏனென்றால் வெளிநாட்டு வங்கிகளில் கொடுக்கப்படும்
வட்டி விகிதம் மிகவும் குறைவு.

ஆனால் இந்திய நாட்டில் சொத்து வாங்குவதற்கான விதிமுறைகள் தெரியாததால் பல
இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் சொத்தை விற்கும் போதும்
வாங்குபவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்
இரு வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

1. Non Resident Indian (NRI)
இந்திய குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் வேலைக்காகவோ, தொழில் செய்வதற்காகவோ
அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளிநாட்டில் தங்க நேரிடும் போது அவர்
NRI-ஆக கருதப்படுகிறார்.

2. Person of Indian Origin (PIO)
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தானம், பூட்டான், இலங்கை மற்றும்
நேபாளம் ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வாழும் வெளிநாட்டு வாழ்
இந்தியர்கள் கீழ்கண்டவற்றை ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் போது PIO- ஆக
கருதப்படுகிறார்கள்.

a) அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தால்.

b) இந்தியக் குடி உரிமை சட்டம், 1955 (57 of 1955) படி அவருடைய தந்தை
அல்லது paternal grand father இந்தியாவின் குடி உரிமை பெற்றவராக இருக்க
வேண்டும்.

மேற்கண்டவர்கள் இந்தியாவில் சொத்து வாங்கலாம். அப்படி வாங்கும் போது நம்
அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. வீட்டுமனைகள், வணிகவளாக இடம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு (flat)
போன்றவற்றை வாங்கலாம். விவசாய நிலம், பண்ணைத்தோட்டம் மற்றும் plantation
சொத்துக்கள் முதலியவைகளை வாங்கக்கூடாது.

2. இடம் யாரிடம் இருந்து வாங்குகிறாரோ அவருக்கு செலுத்த வேண்டிய தொகையை
வாங்குபவர் எந்த நாட்டில் குடியிருக்கிறாரோ அங்கு அவர் பெயரில் உள்ள
வங்கியில் இருந்தோ அல்லது இந்தியாவில் உள்ள அவரது வங்கி கணக்கில் இருந்தோ
Reserve Bank of India- வின் விதிமுறைப்படி பணம் செலுத்தியிருக்க
வேண்டும்.

3. மும்பையில் இருக்கும் Central Office of Reserve Bank-கிற்கு IPI7என்ற
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சொத்து வாங்கிய 90 நாட்களுக்குள்
கிரயப்பத்திரத்தின் நகலையும் மற்றும் நிலம் விற்பனை செய்தவருக்கு பணம்
வங்கி மூலம் செலுத்தப்பட்டதற்கான சான்றுகளையும் இணைத்து அனுப்பவேண்டும்.
IPI 7 படிவத்தில் பெயர், முகவரி எதன் அடிப்படையில் நீங்கள் NRI அல்லது
PIO ஆக இருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய சொத்து பற்றிய விவரம், எதற்காக
வாங்குகிறீர்கள் என்ற காரணம், எப்படி பணம் நீங்கள் செலுத்தி
இருக்கிறீர்கள் போன்ற விவரங்கள் இதில் கேட்கப்பட்டிருக்கும்.

மேற்கண்ட விதிமுறைகளை கைபிடிக்கும் பட்சத்தில் சொத்து வாங்குவதில் எந்த
பிரச்சனையும் இருக்காது.

இதில் பலர் செய்யும் தவறு இந்த விவரம் தெரியாமல் பண்ணை நிலங்கள் மற்றும்
உள்ளாட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் முதலியவற்றை வாங்கி
விடுவது தான். உள்ளாட்சியில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரம்
இல்லை என்ற காரணத்தினால் அந்த இடமும் அது எதற்கு பயன்படுத்தப்பட்டதோ அந்த
நிலமாகவே கருதப்படும். எடுத்துக்காட்டாக ஒரு விவசாய நிலம் உள்ளாட்சியால்
அங்கீகரிக்கப்பட்டு வீட்டு மனைகளாக விற்கப்பட்டிருந்தால் அது வீட்டு
மனையாக கருதப்படாது. விவசாய நிலமாகவே கருதப்படும். அதனால் இந்த இடத்தை
NRI அல்லது PIO வாங்கக்கூடாது.

மலேசியாவில் வசிக்கும் PIO ஒருவர் 2000-ஆம் ஆண்டு இந்த விவரம் தெரியாமல்
அரக்கோணம் அருகில் 5 ஏக்கர் பண்ணை நிலம் ஒன்றை வாங்கி அதை அதிக பணம்
செலவழித்து மா, கொய்யா, தென்னை போன்ற மரங்களை நட்டு பராமரித்து வந்தார்.
அவசரத்தேவைக்கு இப்போது விற்க நினைக்கும் போது அவரால் அந்த இடத்தை விற்க
முடியவில்லை. வாங்குவதற்கே அனுமதி இல்லாத ஒருவரால் இதை எப்படி விற்க
முடியும் என்று பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்போது விற்கவும்
முடியாமல் அதை என்ன செய்வது என்றும் தெரியாமல் திணறுருகிறார்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். பலர்
இந்தியாவில், முக்கியமாக தமிழ் நாட்டில் நிலத்தில் முதலீடு செய்து விட்டு
சிறிது காலத்திற்குப் பிறகு அதை நல்ல விலைக்கு விற்று, விற்ற முழு
பணத்தையும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டிற்கு எடுத்துச்
செல்லலாம் என நினைக்கிறார்கள். அது தவறு. அவர்கள் 26.05.1993 அன்றோ
அல்லது அதற்கு பிறகோ சொத்து வாங்கி இருந்தால் அந்த சொத்தை அவர்கள்
விற்பனை செய்யும் பட்சத்தில், இடம் வாங்கும் போது எவ்வளவு பணம்
கொடுத்தார்களோ அந்த பணத்தை மட்டும் தான் அவர்கள் வசிக்கும் நாட்டிற்கு
வங்கி வழியாக எடுத்துச் செல்ல முடியும். மீதி பணத்தை இந்தியாவில்
அவர்களுடைய வங்கி அக்கவுன்ட்டில் தான் வைத்திருக்க வேண்டும்.
26.05.1993-க்கு முன்பு வாங்கி இருக்கும் சொத்தை விற்கும் போது முழு
பணத்தையுமே எடுத்துச் செல்ல முடியாது. பணத்தை எடுத்துச் செல்வதற்கும் சில
விதிமுறைகள் இருக்கின்றன. அதற்கு மும்பையில் இருக்கும் Central Office of
Reserve Bank -ன்அனுமதி பெற வேண்டும். IPI 8 என்ற படிவத்தை பூர்த்தி
செய்து நிலம் விற்ற 90 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். Reserve Bank of
India -யிடம் அனுமதி பெற்ற பின்னரே பணத்தை எடுத்துச் செல்ல முடியும். IPI
8 படிவத்தில் பெயர், குடியுரிமை, பிறந்த தேதி, விற்ற சொத்தின் முழு
விவரங்கள் மற்றும் இந்தியாவில் அவருக்கு இருக்கும் வங்கியின் அக்கவுன்ட்
விவரங்கள் முதலியவை கேட்கப்பட்டிருக்கும். இரண்டு சொத்துக்களுக்கு
மட்டுமே இப்படி செய்ய முடியும். இரண்டு சொத்துக்களுக்கு மேல்
வாங்குபவர்கள் அந்த சொத்தை விற்கும் போது தாங்கள் அனுப்பிய பணத்தைக் கூட
திருப்பி எடுத்துச் செல்ல முடியாது. மேலும் சொத்து வாங்கி மூன்று
வருடத்திற்கு பிறகு தான் விற்க முடியும். இந்த விவரம் தெரியாததால் பல
பேர் அவதிப்படுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு ஒரு வீட்டு மனையை அமெரிக்காவில் வாழும் NRI ஒருவர்
வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நிலம் வாங்குவதற்கு அவர்
கொடுத்த தொகை 5,000.00 US டாலர்கள் 2010-ல் அவர் அந்த வீட்டு மனையை
ரூ.7,00,000.00 (ரூபாய் ஏழு இலட்சம்)-த்திற்கு விற்கிறார். US டாலரின்
மதிப்பு ரூபாய்.45.00 என்று வைத்துக் கொள்வோம். ரூபாய். ஏழு
இலட்சசத்திற்கு அவருக்கு 15,555.00 US டாலர்கள் கிடைக்கும். ஆனால் அவர்
2001-ல் நிலம் வாங்கும் போது கொடுத்த 5,000.00 US டாலர்கள் மட்டுமே அவர்
வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல முடியும். மீதி
தொகையை இந்தியாவில் அவருடைய வங்கிக் கணக்கில் தான் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலம் மட்டுமே வெளி நாடுகளில் இருந்து சம்பாதித்து விட்டு
திரும்பி வருபவருக்கு இந்த மாதிரி பிரச்சனை ஏற்படாது.

அதனால் வெளிநாடு சென்று வேலை பார்த்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவிற்கு
திரும்பி வந்து இருந்தால் மட்டுமே இங்கு இடம் வாங்க வேண்டும்.
வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற நினைப்பவர்கள் சம்பாதித்த பணம்
பன்மடங்காக பெறுக வேண்டும் என்ற ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு
சொத்துக்களை வாங்கக் கூடாது. 1998-ஆம் ஆண்டு லண்டனில் வேலை கிடைத்த
ஒருவர் குடும்பத்தோடு லண்டன் செல்கிறார். அவருடைய திட்டம் 10 ஆண்டுகள்
அங்கிருந்து பணம் சம்பாதித்தவுடன் இந்தியா திரும்புவதாக எண்ணம். தனது
இரண்டு குழந்தைகளையும் அங்கேயே பள்ளிகளில் சேர்த்து விடுகிறார். 2000-ஆம்
ஆண்டு மனைவிக்கும் அங்கு வேலை கிடைக்கிறது. இருவர் சம்பாத்தியத்தில்
தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை வாங்குகிறார்கள். 2010-ல் அவர்கள் முதலில்
திட்டமிட்டபடி தமிழ்நாட்டிற்கு வர முயற்சி எடுக்கிறார்கள். அவர்களுக்கு
ஏற்றாற் போல் இங்கு வேலையும் அமையவில்லை. பிள்ளைகளும் வளர்ந்து விட்ட
காரணத்தினால் கல்வி முறையும் வேறுபடுவதால் பிள்ளைகள் லண்டனிலேயே இருக்க
விரும்புகிறார்கள். இப்போது அவர்கள் தமிழ்நாட்டில் வாங்கிய இடம் பல
மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. நமது அரசாங்க சட்டப்படி அவர்கள்
லண்டனிலிருக்கும் போது இங்கு இடம் வாங்கியதற்கு அனுப்பிய பணத்தை மட்டுமே
இப்போது அங்கு எடுத்துச் செல்ல முடியும். மீதி பணத்தை என்ன செய்வது என்று
தெரியவில்லை. யாருக்கு கொடுப்பது என்றும் புரியவில்லை. அவ்வளவு பெரிய
தொகையை இங்கு விட்டுச் செல்ல மனமில்லாமலும் என்ன செய்வது என்று
தெரியாமலும் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

-----------------
வெளிநாட்டிலுள்ள பலர் தங்கள் பெயரில் சொத்து வாங்க ஆசைப்பட்டாலும்
அதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை. இங்கு உள்ள தமக்கு நம்பிக்கையான ஒருவரை
POA நியமித்து தங்கள் பெயரிலே சொத்து வாங்கலாம். இந்த விவரம் தெரிந்து
இருந்தும் சிலர் POA-யாக நியமிக்கப்படுபவர் அதை தவறான வழியில்
உபயோகப்படுத்தி விடுவார் என்ற பயத்தினாலும் சொத்து வாங்க யோசிப்பது
உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் பெயரிலே அரசாங்க விதிமுறைகளுக்கு
உட்பட்டு தமிழ்நாட்டில் (இந்தியாவில்) இடம் வாங்க முடியும்.

POA-ஆக நியமிக்கப்படுபவருக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கும் பட்சத்திலும்,
பத்திரத்தில் குறிப்பிடப்படும் விஷயங்கள் Specific (குறிப்பாக) இல்லாத
சமயத்தில்தான் அதை தவறான வகையில் உபயோகப்படுத்த முடியும். எந்த சொத்தை
வாங்க இருக்கிறோமோ அந்த சொத்தை வாங்குவதற்கு மட்டும் அவருக்கு POA
கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கப்படும் POA-யில் Power-யாருக்கு
கொடுக்கிறோமோ அவருடைய பெயர், முகவரி, சொத்தினுடைய முழு விவரம் அதாவது
அளவு (Measurement), சர்வே எண், கிராமம், வட்டம், மாவட்டம், எந்த சார்
பதிவாளர் அலுவலகத்தில் இந்த சொத்து பதிவு செய்யப்பட இருக்கிறதோ அதனுடைய
விவரம் முதலியவை குறிப்பிடப்பட வேண்டும். மேற்கண்ட விவரம் அனைத்தும்
தெளிவாக இருக்கும் பட்சத்தில் POA-யாக நியமிக்கப்படுவர் தவறான முறையில்
POA உபயோகிக்க முடியாது. ஏனென்றால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சொத்திற்கு
மட்டும் அந்த குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்
பத்திரத்தில் கையொப்பம் இட்டத்துடன் அவர் வேலை முடிந்து விட்டது. வேறு
எதற்கும் அவர் அந்த POA உபயோகிக்க முடியாது.

(எ.கா). ‚பெரும்புத்தூர் வட்டத்தில், வடகால் 'B' கிராமத்தில், 270 சர்வே
எண்ணில் அடங்கி உள்ள 2400 சதுர அடி கொண்ட அரசாங்கத்தால்
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனையை அமெரிக்காவில் உள்ள ஒருவர் வாங்குவதாக
வைத்து கொள்வோம். அவர் சென்னையிலுள்ள நம்பிக்கை உள்ள ஒருவரை POA
நியமிக்கிறார். இந்த சொத்து‚ பெரும்புத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட விவரங்களை குறிப்பிட்டு POA
கொடுக்கும் பட்சத்தில் POAயாக நியமிக்கப்பட்டவர்‚ பெரும்புத்தூர்
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பத்திர பதிவின் போது அமெரிக்காவில்
உள்ளவரின் சார்பில் கையொப்பம் இடுவார். வேறு எதற்கும் இந்த POA உபயோகிக்க
முடியாது.

சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை வாங்க வேண்டியதிருக்கும் என்ற
பட்சத்தில், ஒவ்வொரு முறையும் தனி தனியாக POA தயாரிக்க வேண்டியதிருக்குமே
என்று, அதற்கு நேரம் இல்லை, அலைய முடிவதில்லை என பல காரணங்களை சொல்லி ஒரே
பத்திரத்தின் மூலம் எல்லா அதிகாரத்தையும் கொடுத்து விட்டு இறுதியில்
பிராச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் வேலை
கிடைத்தவுடன், அங்கு போவதற்கு முன்பு இங்கு இருக்கும் போதே தன்னுடைய
உறவினர் யாரையாவது POA-ஆக நியமித்து அவருக்கு எல்லா அதிகாரமும் கொடுத்து
விடுகிறார்கள்.

2005-ல் அமெரிக்காவில் ஒருவருக்கு வேலை கிடைக்கிறது. 5 வருடம் பணிபுரிய
வேண்டிய வாய்ப்பு. அவருடைய உறவினர் ஒருவரின் அறிவுரையின் படி தம்முடைய
உறவினர் ஒருவரை POA-யாக நியமித்து விட்டு அமெரிக்கா செல்கின்றார். அந்த
POA-யில் எந்த ஒரு சொத்து வாங்குவதற்கு, விற்பதற்கு, வங்கியில் அடமானம்
வைப்பதற்கு லே-அவுட் போடுவதற்கு போன்ற எல்லாவற்றுக்கும் அவருக்கு
அதிகாரம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு போய் சம்பாதித்து பணத்தை
இங்கே அனுப்பி POA மூலம் வளசரவாக்கத்தில் ஒரு சொத்து வாங்குகிறார்.

பத்திரப்பதிவு எல்லாம் முடிந்த பிறகு பத்திரத்தின் Xerox ஒன்றும் POA-ஆல்
அவருக்கு அனுப்ப படுகிறது. அதை பார்த்த அவர் எல்லாம் நன்றாக நடந்து
விட்டதாக நினைத்து சந்தோஷப்படுகிறார். 2வருடம் கழித்து சென்னை வந்த
அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருக்கிறது. POA-ஆல் அந்த சொத்து
முன்று மாதத்திற்கு முன்பே விற்கப்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது
என்று அவருக்கு புரியவில்லை. இதற்கு காரணம் என்ன? POA-யை நியமிக்கும்
போது சொத்தை விற்பது உட்பட எல்லாவற்றுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது
தான்.

மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கு நாமே வழிமுறையை உண்டு பண்ணுகின்றோம்.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு ஆவணத்தைத் தயாரிக்க
வேண்டும். ஆவணத்தை வெள்ளை தாளில் தயாரித்தால் போதும் முத்திரை தாள் தேவை
இல்லை. இப்படி தயாரித்த ஆவணத்தில் அங்கு Notary இடம் கையொப்பம் பெற
வேண்டும் (இங்கு Notary Public என்பது போல). மேலும் POA கொடுப்பவர்
புகைப்படம், மற்றும் இடது பெருவிரல் ரேகை இருக்க வேண்டும். Notary-ன்
முழு விவரம் அதாவது பெயர், முகவரி, அவருடைய Licence காலவதியாகும் நாள்,
அவருடைய கையெழுத்து, முக்கியமாக அவர்களுக்கு அங்கு உள்ள அரசாங்கத்தால்
அனுமதி அளிக்கப்பட்ட முத்திரை முதலியவை இடம் பெற்று இருக்கும். மேலும் 2
சாட்சிகளும் கையொப்பம் இட வேண்டும். பத்திரத்தில் எல்லா பக்கங்களிலும்
POA கொடுப்பவர் கையொப்பம் இருக்க வேண்டும்.

இந்த POA ஆவணத்தைத் தபால் அல்லது Courier மூலம் POA-யாக
நியமிக்கப்படுபவருக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் Visa நகல் அல்லது அங்கு
எத்தனை வருடங்கள் தங்க அனுமதி கிடைத்து இருக்கிறது என்பதற்கான
ஆதாரங்களில் ஏதேனும் ஒன்றையும் அனுப்ப வேண்டும். இந்த POA ஆவணத்தைத்
தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு District Registrar அலுவலகத்தில்
Adjudication செய்ய வேண்டும். அதற்கு வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட Power
ஆவணம், POA-யாக நியமிக்கப்படுபவரின் புகைப்படம், ID Proof, Visa நகல்
முதலியவற்றை District Registrar அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
முத்திரைத்தாள் கட்டணமாக 105/- ரூபாய் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்
கொள்ள வேண்டும். POA-யின் புகைப்படம் Power ஆவணத்தின் ஏதாவது ஒரு
பக்கத்தின் பின்புறம் ஒட்டப்பட்டு, District Registrar அந்த
புகைப்படத்தில் கையொப்பம் இடுவார். மேலும் Adjudication Number ஒன்று
கொடுக்கப்படும். மேலும் 105/- ரூபாய் POA- யால் கட்டப்பட்ட விவரம்
குறிப்பிடப்பட்டு District Registrar கையொப்பம் இட்டு இருப்பார்.
Adjudication Number மிகவும் முக்கியமானது. இந்த நம்பரை சொத்து வாங்கும்
போது பதிவு செய்யப்படும் கிரையப்பத்திரத்தில் மறக்காமல் குறிப்பிட
வேண்டும்.

Power ஆவணம் வெளிநாட்டில் எந்த தேதியில் Notary-யிடம் கையொப்பம்
வாங்கப்பட்டதோ அன்றிலிருந்தது 90 நாட்களுக்குள் இங்கு Adjudication
செய்துவிட வேண்டும். அதற்கு பிறகு செய்ய முடியாது. பிறகு திரும்பவும்
புதிய Power தான் வெளிநாட்டில் இருந்து அனுப்ப வேண்டும்.

இந்த POA முறையில் ஒரு குறைபாடும் இருக்கிறது. இப்படி வெளிநாட்டிலிருந்து
அனுப்பப்படும் Power தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு District Registrar
அலுவலகத்தில் Adjudication செய்யப்படுவதால் EC-யில் இந்த entry வராது.
01.11.2009 முதல் தமிழ்நாட்டில் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் Power
பதிவு செய்யப்பட்டாலும் அது சொத்து அமைந்துள்ள சார் பதிவாளர்
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு EC-யில் entry வரும்படி அரசாங்கத்தால்
வழிமுறை செய்யப்பட்டது. இது பல மோசடிகள் தவிர்க்க உதவியது.

இதே முறையை வெளிநாட்டிலிருந்து கொடுக்கப்படும் POA-க்கும்
அமுல்படுத்தினால் மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள
எந்த District Registrar அலுவலகத்தில் Adjudication செய்யப்பட்டாலும் அது
உடனேயே சொத்து அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு
EC-யில் entry வரும்படி செய்ய வேண்டும். இப்படி செய்த பிறகு தான் இந்த
POA உபயோகப்படுத்த முடியும் என்றும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

சிலருக்கு இன்னும் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து
POA சொத்து வாங்கும் போது பத்திரத்தில் யாருடைய பெயர் இருக்கும், யாருடைய
புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும் என்பது தான். கிரையப்பத்திரத்தில் சொத்து
வாங்குபவர் என்ற இடத்தில் வாங்குபவர் பெயர் தான் இருக்கும். ஆனால் POA
தான் கிரையப்பத்திரத்தில் கையொப்பம் இடுவார் என்பதினால் represented by
என்று POA-யின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் புகைப்படம்
ஒட்டப்படும் இடத்தில் POA-யின் புகைப்படம் தான் இருக்கும். சொத்து
வாங்குபவரின் புகைப்படம் இருக்காது.

Layout purchase

http://www.nilacharal.com/ocms/log/06061105.asp
http://www.nilacharal.com/ocms/log/06131105.asp
http://www.nilacharal.com/ocms/log/06201107.asp
http://www.nilacharal.com/ocms/log/05161104.asp
http://www.nilacharal.com/ocms/log/05231106.asp


முதலீட்டிற்காகவும் மற்றும் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றை
மனதில் கொண்டு நிலத்தில் முதலீடு செய்வோர் அதிகம். இவர்கள் முதலில்
தேர்ந்தெடுப்பது புற நகர்ப்பகுதியில் layout -ல் வீட்டு மனை வாங்குவது.
விற்பனையாளர்கள் கொடுக்கும் விளம்பரம் மற்றும் இலவச பரிசுகள் முதலியவற்றை
நம்பி, குறிப்பிட்ட காலத்தில் விலை பன்மடங்கு ஆகி விடும் என்ற
நம்பிக்கையில் பலபேர் முதலீடு செய்கிறார்கள். மற்ற வியாபாரங்களைப் போலவே
இந்த தொழிலிலும் பல இலவச அறிவிப்புகள் வெளியாகின்றன. அவர்களுடைய layout
-ல் வீட்டு மனை வாங்குபவர்களுக்குப் பத்திர பதிவு இலவசம், பட்டா இலவசம்,
கவர்ச்சிகரமான பொருட்கள் இலவசம், 3 வருட பராமரிப்பு இலவசம் போன்ற
இலவசங்களை நம்பியும் நிலம் வாங்குகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து
வீடுமனை வாங்குபவர்கள் அது அங்கீகரிக்கப்பட்ட layout-தானா எனப்
பார்ப்பதில்லை. மேலும் எப்படிப்பட்ட வீட்டுமனையை வாங்க வேண்டும் என்றும்
தெரிவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட layout-க்கும் அங்கீகரிக்கப்படாத layout
-ற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? என்று பலருக்கும் தெரிவதில்லை.

நீங்கள் வீடுமனை வாங்கியிருக்கும் layout அங்கீகரிக்கப்பட்ட (approved)
layout தானா என பலரிடம் கேட்கும் போது அவர்களிடமிருந்து வரும் பதில் ஆம்
என்பது தான். ஆனால் அதற்கு பின்னாலேயே இன்னொன்றையும் சேர்த்து
சொல்வார்கள். அது பஞ்சாயத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்பது. பஞ்சாயத்து
அங்கீகாரம் என்று ஒன்று கிடையாது என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
பஞ்சாயத்தில் கொடுக்கப்படும் கடிதத்தைத்தான் அவர்கள் அங்கீகாரம் என
நினைக்கிறார்கள். எந்த இடத்தையும் வீட்டு மனைகளாக பிரித்து அதற்கு
அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பஞ்சாயத்துக்கு இல்லை. எந்த உள்ளாட்சி
அமைப்பிற்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் பஞ்சாயத்திடம் இருந்து layout
-க்கு அங்கீகாரக் கடிதத்தை வாங்கி அதை அதிக உரிமையாளர்கள் விற்றுக்
கொண்டிருந்தார்கள். அதனால் ஏற்படும் பல தீமைகளைக் கருதி அரசாங்கம் இது
போன்று அங்கீகாரங்களை வழங்கக்கூடாது என அறிவித்தது. அது முழுமையாக
நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. அப்படியென்றால் நிலத்தினை
வீட்டுமனைகளாக பிரித்து விற்பதற்கு அங்கீகாரம் யார் கொடுக்க வேண்டும்?
அங்கீகாரம் பெற்ற layout -க்கும் அங்கீகாரம் பெறாத layout -க்கும் உள்ள
வித்தியாசம் என்ன?

தமிழ் நாட்டில் Chennai Metropolitan Area-ல் வரும் இடங்களை வீட்டு
மனைகளாகப் பிரித்து அந்த layout-க்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம்
CMDA(Chennai Metropolitan Development Authority- சென்னை பெரு நகர
வளர்ச்சிக் குழுமம்) க்கு இருக்கிறது. இதைத் தவிர தமிழ் நாடு முழுவதும்
உள்ள மற்ற இடங்களுக்கு வீட்டு மனைப்பிரிவிற்கு அங்கீகாரம் கொடுக்கும்
அதிகாரம் DTCP (Directorate of Town and Country Planning - நகர்
ஊரமைப்புத்துறை)-க்கு மட்டும் தான் உண்டு. பஞ்சாயத்திற்கோ அல்லது வேறு
எந்த உள்ளாட்சி அமைப்பிற்கோ, வேறு எந்த அரசாங்கத் துறைக்கோ அதிகாரம்
கிடையாது. சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள DTCP-க்கு தமிழ் நாடு
முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள் (Regional Office), 15 உள்ளூர் திட்ட
குழுமங்கள் (Local Planning), 10 New Town Developments Authorities
ஆகியவை இருக்கின்றன. இவைகளால் மட்டும் தான் தமிழ்நாடு முழுவதும் வீட்டு
மனைப் பிரிவிற்கு (layout) அங்கீகாரம் கொடுக்க முடியும் . இவைகளின்
கீழ்தான் தமிழ் நாட்டில் எல்லா இடங்களும் பிரித்து
கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உள்ளூர் திட்டக் குழுமத்தின் limit-ல்
உள்ள இடங்கள் பல zone-களாக பிரிக்கப்பட்டிருக்கும்.

1. Residential Zone - குடியிருப்பு பகுதி
2. Commercial Zone - வர்த்தகம் அல்லது வணிகப் பகுதி
3. Industrial Zone - தொழிற்சாலை பகுதி
4. Educational use Zone - கல்வி நிறுவனங்கள் பகுதி
5. Public and Semi Public use Zone
6. Agricultural Zone - விவசாய பகுதி

இதில் Residential Zone-ல் வரும் இடத்தை மட்டும் தான் வீட்டு மனைகளாகப்
பிரித்து அங்கீகாரம் பெற முடியும். மற்ற Zone-ல் உள்ள இடத்தினை வீட்டு
மனைகளாக பிரிக்க வேண்டும் என்றால், அரசாங்கத்துக்கு மனு செய்து முதலில்
Zone மாற்றம் (Conversion) செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக : Agricultural Zone அல்லது Industrial Zoneல் உள்ள
இடத்தினை வீட்டு மனைகளாக பிரித்து layout போட வேண்டும் என்றால் அதை
Residential Zone -க்கு மாற்றம் செய்து விட்டுத்தான் போட முடியும்.

DTCP-ல் வீட்டு மனைப் பிரிவிற்கு (layout) அங்கீகாரம் வழங்க என்னென்ன
முறைகள் பின்பற்றப் படுகின்றன என்பதை பார்ப்போம். அப்போது தான்
அங்கீகாரம் பெறாத வீட்டுமனையில் உள்ள பிரச்சனைகள் தெளிவாக புரியும்.

1. Layout போட உத்தேசிக்கும் இடத்திற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில்
இருந்து ஒரு சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழில் மேற்கண்ட நிலங்கள்
அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லை என்றும், நில சீர்திருத்தச் சட்டம்
மற்றும் நகர்புற நில உச்ச வரம்பு சட்டம் ஆகியவையின் கீழ் கையகப்படுத்தும்
நடவடிக்கை இல்லை என்றும் வெள்ளப் பெருக்கால் பாதிப்பிற்கு உள்ளாகும்
நிலையில் இல்லை என்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சான்று
கொடுக்கப்படும். இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள்
நேரில் வந்து நிலத்தை ஆய்வு செய்த பிறகு மேற்கண்ட சான்றிதழை
அளிப்பார்கள்.

2. பின்பு உள்ளூர் அமைப்புகளின் அதாவது ஊராட்சி, பேரூராட்சி போன்றவை
மூலம் தான் நகர் ஊரமைப்பு துறைக்கு விண்ணப்பம் செய்ய முடியும். இதற்கு
நிலம் சம்பந்தப்பட்ட கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், பட்டா, சிட்டா,
அடங்கல், வில்லங்கச் சான்றிதழ் மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்ற
சான்றிதழ், சில தேவையான ஆவணங்களை இணைத்து, உள்ளாட்சி அமைப்பில் இருந்து
இடம் சம்பந்தப்பட்ட விபரங்கள் அடங்கிய வினா விடைப்படிவம் ஒன்றை பூர்த்தி
செய்து இணைத்து உள்ளாட்சி அமைப்பின் மூலம் நகர் ஊரமைப்புத்துறை மண்டல
அலுவலகத்திலும் அல்லது இடம் உள்ளூர் திட்டக் குழுமத்தின் கீழ் வந்தால்
அந்த அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த அலுவலக அதிகாரி இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்.
நிலத்திற்கு அருகில் நீர் நிலைகள் ஏதும் இருக்கக்கூடாது. இடுகாடு, ரயில்
தண்டவாளம் போன்றவை இருக்கக் கூடாது என்ற சில நிபந்தனைகளை ஆய்வு செய்வார்.
மேலும் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் பரிசீலனை
செய்யப்படும். அங்கு எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து அவர்களே ஒரு layout
வரைந்து அதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதற்கு தொழில் நுட்ப ஒப்புதல்
எனப் பெயர். இந்த layout -க்கு அங்கீகார எண் ஒன்று கொடுக்கப்படும். அந்த
layout-ல் விதிகளுக்கு உட்பட்டு பொது ஒதுக்கீடு, சாலை, கடைகள்,
பிளாட்டின் அளவுகள் அமைந்திருக்கும். மனையின் எண்ணிக்கை, பொது உபயோகம்,
சாலை, கடைகள் முதலிய ஒதுக்கீடுகள் அந்த layout -ல் சதுர அடிகளிலேயே
கொடுக்கப்பட்டிருக்கும்.

மேற்கண்டவாறு தொழில் நுட்ப ஒப்புதல் அளிக்கப்பட்ட layout உள்ளாட்சி
அமைப்பதற்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அதில் சில நிபந்தனைகளும்
குறிக்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி அமைப்பானது அந்த நிபந்தனைகளையெல்லாம்
மனுதாரருக்கு தெரிவித்து அவர் அதை பூர்த்தி செய்தவுடன் இறுதி ஒப்புதல்
வழங்க வேண்டும். layout -ல் எந்த மாற்றமும் செய்ய உள்ளாட்சி அமைப்பிற்கு
அதிகாரம் கிடையாது.

நிபந்தனைகளில் எல்லாவற்றிற்கும் பொதுவானது இரண்டு.

1. Layout-ல் குறிப்பிட்டிருக்கும் சாலை மற்றும் பொது ஒதுக்கீடு பகுதியை
தான பத்திரத்தின் (Gift Deed) மூலம் மனுதாரர் உள்ளாட்சி அமைப்பிடம்
ஒப்படைக்க வேண்டும்.

2. அன்றைய தேதி வரை layout-க்கு தொழில் நுட்ப ஒப்புதல்
கொடுக்கப்பட்டிருக்கும் இடம் அரசாங்கத்தால் நில ஆர்ஜித நடவடிக்கைக்கு
உட்படுத்தப்படவில்லை என்று உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்து கொள்ள
வேண்டும்.

மேற்சொன்னவைகளும், மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தால்
அவைகளும் நிறைவேற்றப் பட்டபின் உள்ளாட்சி அமைப்பால் தீர்மானம் ஒன்று
நிறைவேற்றப்பட்டு layout-க்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்.
உள்ளாட்சியின் பங்கு நகர் ஊரமைப்புத்துறை சொல்லும் நிபந்தனையை
பின்பற்றுவது தான். இதில் வேறெதுவும் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

இப்போது தான் அங்கீகாரம் முழுமை பெறுகிறது. இதற்கு பின்பு தான் layout
-ல் உள்ள பிளாட்டுகளை உரிமையாளரால் விற்பனை செய்ய முடியும்.

இடம் 5 ஏக்கருக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஒப்புதல்
மண்டல அலுவலகம் (அல்லது) உள்ளூர் திட்டக்குழுமத்திலேயே வழங்கப்பட்டு,
இறுதி ஒப்புதலுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அனுப்பப்படும்.

5 ஏக்கருக்கு அதிகமாக இருப்பின் இடத்தை நேரில் ஆய்வு செய்து அதன் அறிக்கை
மண்டல அலுவலகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்திலிருந்து நகர் ஊரமைப்பு
இயக்குனர் அலுவலகம், சென்னைக்கு அனுப்பப்படும். அங்குதான் தொழில் நுட்ப
ஒப்புதல் வழங்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு
அனுப்பப்படும்.

இவ்வளவு முறைகளை பின்பற்றி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட layout-ல்
கீழ்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.

1. சாலையின் குறைந்தபட்ச அகலம் 23 அடி தவிர 30 அடி, 40 அடி சாலைகளும்
அமைந்திருக்கும்.

2. பொது ஒதுக்கீடு என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும் அது
layout-ன் area -வை பொறுத்தது. பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு திடல்,
சமூகக்கூடம், மருத்துவமனை போன்றவைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

3. Layout-ஐ சுற்றி உள்ள மற்ற எல்லா இடத்திற்கும் layout -லிருந்து வழி
கட்டாயம் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. கடைகளுக்கென்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

5. வீட்டு மனைகளின் நீள அகலங்கள் நெறிப்படுத்தப்பட்டிருக்கும்.

இவற்றில் எந்த முறையையும் பின்பற்றாமல் ஒரே நாளில் பஞ்சாயத்தால்
கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத layout-ல் எதுவும் பின்பற்றப்படாது.
அதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.

1. சாலை மிகவும் குறுகியதாக இருக்கும். 15 அடி சாலைகள் கூட இருக்கும்.
இதனால் அந்த பகுதி வளர்ச்சி அடையும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட
வாய்ப்பு உண்டு.

2. சுற்றியுள்ள இடங்களுக்கு பாதை கொடுக்க வேண்டும் என்ற அவசியம்
இல்லாததால், வழியில்லாத காரணத்தினால் layout-ஐ சுற்றியுள்ள பகுதிகள்
வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. மேலும் இந்த layout -க்கு பின்புறம் நிலம்
வைத்திருப்பவர்கள் இவர்களிடமே குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம்
ஏற்படும்.

3. பொது ஒதுக்கீடும் மிகக் குறைந்த அளவே ஒதுக்கப்படுவதால் அந்த பகுதி
வளர்ச்சி அடையும் போது பள்ளி, மருத்துவமனை போன்ற பொது நல கட்டிடங்கள்
கட்டுவதற்கு இடம் இருக்காது.

4. பிளாட்டின் நீள அகலங்களும் முறையாக இருக்காது.

இப்படிப்பட்ட இடத்தில் நிலத்தினை நீங்கள் வாங்கும் போது, உங்கள் எண்ணம்
நிறைவேறாது. மேற்கண்ட பிரச்சனைகள் எதிர்காலத்தில் அந்த பகுதியின்
வளர்ச்சியை பாதிக்கும்.

பஞ்சாயத்து அங்கீகாரம் என்று ஒன்று இல்லையென்றாலும், இன்னும் பல
இடங்களில் பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற layout என்று விளம்பரம் செய்து
விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் பெரும் பிரச்சனைகள்
ஏற்பட வாய்ப்பு உண்டு.

இதைக் கட்டுப்படுத்த இதற்கான விதிமுறைகளை அரசாங்கம் கடினப்படுத்த வேண்டும்.

பஞ்சாயத்து மற்றும் வேறு உள்ளாட்சி அமைப்பிலிருந்து கொடுக்கப்படும்
அங்கீகாரம் பெற்ற layout-ல் உள்ள மனைகளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்ய தடை விதிக்க வேண்டும்.

DTCP-ஆல் கொடுக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட layout -ல் கீழ்கண்ட
விவரங்கள் அடங்கி இருக்கும்.

1. Layout போடும் இடம் எந்த உள்ளாட்சியில் அமைந்துள்ளது மற்றும் கிராமம்,
வட்டம், மாவட்டம் முதலியன இருக்கும்.

2. சர்வே எண்கள் மனைப்பிரிவின் மொத்தப் பரப்பு ஏக்கரிலும் சதுர அடியிலும்
குறிப்பிடப்பட்டிருக்கும்.

3. DTCP-ன் கோப்பு எண்.

4. மனுதாரரால் கோரப்பட்ட மனைகளின் எண்ணிக்கை.

5. DTCP -ஆல் ஒதுக்கப்பட்ட மனைகளின் எண்ணிக்கை.

6. பொது ஒதுக்கீடுகள் - பூங்கா, சாலை, சிறுவர்கள் விளையாடும் இடம்
முதலியவை சதுர அடியிலும் சதவீதத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவை
உள்ளாட்சிக்குத் தானமாக அளிக்க வேண்டியவை.

7. பொது உபயோகம் - கடைகள், சமூக நலக்கூடம் போன்றவை மனுதாரரால் விற்பனை
செய்யப்படலாம். ஆனால் மேற்கண்ட காரணத்திற்காக மட்டும் தான் அந்த இடம்
உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

8. மூலை முடுக்கு, கட்டிட வரம்பு முதலியவற்றிற்கு எவ்வளவு இடம் கொடுக்க
வேண்டும் என்ற விபரமும் இருக்கும்.

9. உள்ளாட்சியால் நிலம் சம்பந்தமாக,உறுதி செய்து கொள்ள வேண்டிய நிபந்தனைகள்.

10. DTCP-ஆல் கொடுக்கப்படும் அங்கீகார எண்.

11. DTCP-ன் ஆணையர் உட்பட அதிகாரிகளின் கையொப்பம்.

DTCP-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ள வீட்டு மனையில் பிளாட் வாங்குவோர்
கவனிக்க வேண்டியவை:-

1. தொழில்நுட்ப ஒப்புதலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை பூர்த்தி
செய்த பிறகுதான் உள்ளாட்சி இறுதி ஒப்புதல் வழங்கி இருக்கிறதா என்பதையும்,
உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் மனுதாரரால் செலுத்தப்பட்டு இரசீது
வாங்கப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பினால் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுதான் இறுதி
ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறதா? என சரிபார்க்க வேண்டும். சில
layoutகளில் உள்ளாட்சி அமைப்பின் தலைவர் கையொப்பம் இட்டு இருப்பார்.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது. இது தவறானது.

2. உள்ளாட்சிக்கு கொடுக்கப்பட வேண்டிய பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதாவது
சாலை, பூங்கா போன்றவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தானபத்திரத்தின் (Gift
Deed) மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள
வேண்டும். பதிவுசெய்யப்படாமல் கொடுக்கப்படும் தானபத்திரம்
செல்லுபடியாகாது.

3. பெரும்பாலான Promoter-கள் Layout-ஐ computer-ரில் பல வண்ணங்களில்
வரைந்து, வாங்குபவரின் பிளாட்டை தனி வண்ணமிட்டு அவர்கள் பத்திரப்பதிவு
செய்யும் போது இணைப்பார்கள். computer layout-ல் எந்தவித மாற்றமும்
செய்யபடவில்லை என்பதை DTCP-ஆல் அனுப்பப்பட்ட layout உடன் ஒத்து பார்த்து
சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

Promoterகள் நமக்கு கொடுக்கும் approved layout-ல் ஏதேனும் சந்தேகம்
ஏற்படும்படியாக இருந்தால் நாம் DTCP-க்கு அந்த layout-ன் அங்கீகார
எண்ணைக் குறிப்பிட்டு நகலைப் பெற்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

Layout-ல் இடம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அவர்கள்
வாங்கும் பிளாட் எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது என்பது தான்.
பொதுவாக layout ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்ணில் அமைந்திருக்கும்.

இப்படி அங்கீகரிக்கப்பட்ட layout-ல் பிளாட் வாங்கி பத்திரப்பதிவு
செய்தவுடன் நம்முடைய வேலை முடிந்து விட்டது என நினைக்கக்கூடாது. நம்
பிளாட் அமைந்திருக்கும் சர்வே எண் அல்லது சர்வே எண்களின்
தாய்ப்பத்திரத்தையும் மறக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியென்றால்
தான் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போது எந்த பிரச்சனையும் வராது.

எடுத்துக்காட்டாக கொடைக்கானலுக்கு அருகில் 1994 ஆம் ஆண்டு ஒரு புகழ்
பெற்ற நிறுவனத்தினர் 100 ஏக்கர் நிலத்தைப் பிரித்து 800 தனித்தனி பண்ணைத்
தோட்டத்தை உருவாக்கினர். அதில் 25 சென்ட் நிலத்தை ஒருவர் வாங்கி
இருக்கிறார். அவருடைய இடம் 1674/3, 1676/2 மற்றும் 1676/3 ஆகிய சர்வே
எண்களில் அமைகிறது. இந்த மூன்று சர்வே எண்களுக்கும் உரிமையாளர்கள் மூன்று
பேர். பத்திரப்பதிவிற்கு பின் அந்த நிறுவனத்திடமிருந்து தாய்ப்பத்திரத்தை
பெற்றுக் கொள்கிறார். 15 வருடங்களாக இவர் பெயரில் பட்டா வாங்க விண்ணப்பம்
செய்யவில்லை. 2009 ஆம் ஆண்டு அந்த இடத்தை விற்க முயல்கிறார். வாங்க
நினைப்பவர்கள் பட்டா கேட்பதால் பட்டா பெற்றுத் தருவதற்காக ஒரு
consultant- ஐ நாடுகிறார். அங்கு எல்லா ஆவணங்களும் சரிபார்க்கப்படும்
பொழுது தாய்ப்பத்திரம் வாங்கும் போது ஏற்பட்ட தவறு தெரிகிறது. மேலே
குறிப்பிட்ட மூன்று சர்வே எண்களில் இரண்டு சர்வே எண்களுக்குத்
தாய்ப்பத்திரம் சரியாக கொடுக்கப்படுகிறது. 1676/3 என்ற சர்வே எண்ணுக்கு
உள்ள தாய்ப்பத்திரத்திற்கு பதிலாக 1676/4 என்ற சர்வே எண்ணின்
தாய்ப்பத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வே எண் அதன் அருகில்
உள்ள வேறொரு பிளாட்டை சேர்ந்தது. இப்பொழுது அந்த புகழ் பெற்ற நிறுவனமும்
இயங்கவில்லை. சரியான சர்வே எண்ணுக்கு உரிய தாய்ப்பத்திரத்தைப் பெற
முடியாத காரணத்தினால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்ய முடியாத நிலை.
அவருடைய அவசரத்தேவைக்கு விற்கவும் முடியவில்லை. அதனால் பிளாட் பதிவு
செய்யப்பட்டவுடன் தாய்பத்திரங்களையும் தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ள
வேண்டும். நம்முடைய பிளாட் அமைந்திருக்கும் சர்வே எண்ணுக்கு, யார்
பெயரில் பட்டா இருக்கிறதோ அந்த பட்டாவிலிருந்து, நமக்கு வரும் வரை உள்ள
அனைத்து பதிவுகளின் (கிரயப்பத்திரம், பவர் ஆஃப் அட்டார்னி முதலியவை)
நகல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.


DTCP Approval முறைகளை அரசாங்கம் இன்னும் மேம்படுத்தலாம். இப்போது உள்ள
முறையில் அங்கீகரிக்கப்பட்ட layout-ல் பொது ஒதுக்கீடுகள் உள்ளாட்சிக்கு
தானபத்திரம் (Gift Deed) மூலம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால்
உள்ளாட்சிலிருந்து பொது ஒதுக்கீட்டுக்கான இடங்களை, உள்ளாட்சியின்
பெயருக்கு Sub Division செய்து பட்டா பெறுவதில்லை. அதனால் வருவாய்
துறையில், இந்த இடம் பழைய உரிமையாளர் பெயரில் தான் இருந்து கொண்டு
இருக்கும். உள்ளாட்சியின் பெயரில் பட்டா மாற்றப்படாததால் பிற்காலத்தில்
பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Layout போடும் Promoter ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளரிடம் இருந்து Power
of Attorney மூலம் layout போடும் பட்சத்தில், அவர் எத்தனை
உரிமையாளர்களிடம் இருந்து Power of Attoreny வாங்கி இருந்தாரோ அத்தனை
உரிமையாளர்களின் சர்வே எண்களிலும் பொது ஒதுக்கீட்டிற்கான இடம் வர
வாய்ப்பு இருக்கிறது. பொது ஒதுக்கீட்டில் சாலையும் அடங்கி இருப்பதால்
எல்லா உரிமையாளர்களின் இடத்திலும் சாலை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் தானபத்திரத்தை உள்ளாட்சிக்கு எழுதிக் கொடுத்தாலும், பொது
ஒதுக்கீட்டிற்கான இடம் Sub division செய்யப்பட்டு DTCP-க்கு
தெரியப்படுத்த வேண்டும் என்ற முறை அமுலுக்கு வரவேண்டும் அல்லது Layout
தமிழ்நாட்டில் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும், தான பத்திரமானது
அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட துறைக்கு எழுதிக் கொடுக்கப்படலாம்.இந்த
பொது ஒதுக்கீட்டை பராமரிப்பது மட்டும் உள்ளாட்சியால் செயல்படுத்தப்பட
வேண்டும்.


பொது மக்களுக்கு வசதியாக DTCP-யால் அங்கீகரிக்கப்பட்ட layout-ன்
விவரங்களை வரைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அங்கீகார எண்ணை
வைத்து பொது மக்கள் layout-ன் விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட
வேண்டும்.

Layout-க்கு உள்ளாட்சி இறுதி ஒப்புதல் கொடுத்த பின்பு அதன் விவரம்
DTCP-யால் பெறப்பட்ட பின்னரே, வீட்டு மனைகளை விற்பனை செய்ய அனுமதி
அளிக்கப்பட வேண்டும்.


Layout போடுபவர்கள் பெரும்பாலோர் நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து Power
of Attorney வாங்கி நிலத்தை Layout ஆக பிரித்து அரசாங்கத்தின் அங்கீகாரம்
பெற்று விற்பனை செய்கிறார்கள். அவர்கள் Power of Attorney வாங்குவதற்கு
இரு காரணங்கள் உண்டு.

1.நிலத்திற்கு உரிய மொத்த பணத்தையும் உரிமையாளரிடம் கொடுத்து நிலத்தை
வாங்க முடியாத நிலை.

2.கிரயப்பத்திரம் செய்தால் Guide line மதிப்பிலிருந்து 8%
முத்திரைத்தாள்கள் மற்றும் 1% பதிவு கட்டணம் மற்ற இதர செலவுகளை
தவிர்பதற்காகவும்

Layout போடுபவர்கள் ஒரு ஏரியாவை தேர்வு செய்து ஒன்றுக்கு மேற்பட்ட
உரிமையாளர்களிடம் நிலத்தை வாங்குவார்கள். அப்படி நிலம் வாங்கும் போது
ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வே எண்கள் அதில் அடங்கி இருக்கும். நில
உரிமையாளர்களும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பாபர்கள். ஒவ்வொரு சர்வே
எண்ணுக்கும் தனித்தனியே ஒரு வரைபடம் உண்டு. அதை FMB என்று சொல்வார்கள்.
(எ.கா) Layout போடும் ஒருவர் A,B,C ஆகிய மூன்று நபர்களிடமிருந்து
நிலங்களை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.Aயிடம் இருந்து சர்வே எண். 862-ல்
அடங்கிய 1 ஏக்கர் 10 சென்ட், Bயிடம் இருந்து சர்வே எண். 866-ல் அடங்கிய 1
ஏக்கர், C யிடம் இருந்து சர்வே எண். 867/4-ல் அடங்கிய 1 ஏக்கர் 25
சென்ட், ஆக மொத்தம் 3 ஏக்கர் 35 சென்ட் இடம் வாங்கி layout போடுகிறார். 3
ஏக்கர் 35 சென்ட்டில் மொத்தம் 24 பிளாட் (மனைகள்) வருவதாக வைத்துக்
கொள்வோம். இந்த மூன்று பேரின் சர்வே எண்ணுக்கும் தனித்தனி வரைபடம்
உண்டு. இந்த மூன்று சர்வே எண்களையும் இணைத்து 24 மனை பிரிவுகள்
பிரிக்கப்படும். இதில் உள்ள ஒவ்வொரு மனை பிரிவும் மேலே சொல்லப்பட்ட
மூன்று உரிமையாளர்களில் ஒருவர் இடத்தில் மட்டும் அல்லது இருவருடைய
இடத்திலும் வரலாம். அதாவது ஒரு சர்வே எண் அல்லது இரண்டு சர்வே எண்களில்
வரலாம். இப்படி வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்ட Layout-ல் இருந்து மொத்தம்
உள்ள 24 வீட்டு மனைகளை 24 பேர் தனித்தனியாக வாங்குகிறார்கள். இந்த 24
வீட்டு மனைகளும் எந்தெந்த சர்வே எண்களில், எந்த இடத்தில், எவ்வளவு ஏரியா
ஆகிய விவரங்கள் FMB-ல் குறிக்கப்பட்டு அதற்கு தனியாக பட்டா வழங்கப்படும்.
இதற்கு தான் உட்பிரிவு பட்டா (Sub Division Patta) என்று பெயர். இவ்வாறு
24 மனைகளுக்கும் உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்பட வேண்டும்.

சில மனைகள் ஒரு சர்வே எண்ணில் அமையும். (எ.கா)1 முதல் 10 மனைகள்
அனைத்தும் சர்வே எண் 862-ல் மட்டும் அமைந்திருக்கிறது மற்றும் 18 முதல்
24 மனைகள் சர்வே எண். 867/4-ல் மட்டும் அமைந்திருக்கிறது . சில மனைகள்
இரண்டு சர்வே எண்களில் அமையலாம். (எ.கா) மனை எண்கள். 11-லிருந்து 17 வரை
சர்வே எண்கள். 866 மற்றும் 867/4 இந்த இரண்டிலும் அமைகிறது. இது,
கிரயப்பத்திரம் செய்யப்படும் போது சொத்து விவரப்பகுதியில் மனை
அமைந்திருக்கும் சர்வே எண்கள் 866 பகுதி மற்றும் 867/4 பகுதி என்று தான்
குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது இதற்கு பட்டா வழங்கும் போது இரண்டு
சர்வே எண்களிலும் எந்தெந்த அளவு இந்த மனை அமைந்திருக்கிறது என்பதைக்
குறிப்பிட்டு இரண்டு சர்வே எண்களும் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா
வழங்கப்படும்.

இப்படி 24 மனைபிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு layout -ல் இடம்
வாங்கும் 24 பேரும் தனித்தனியாக பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போது 24
முறை உட்பிரிவு செய்யப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்திலும்
ஒவ்வொருவரும் தனித்தனியே விண்ணப்பம் செய்யும் போது உட்பிரிவு process
பண்ணப்படுகிறது. ஒரே சர்வே எண் பல முறை உட்பிரிவு செய்யப்பட்டு புதிது
புதிதாக இலக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனால் உட்பிரிவு இலக்கங்களும்
குழப்பங்கள் ஏற்படுத்துவதாக இருக்கும். 24 மனைகள் கொண்ட இந்த layout ல்
மனை எண். 1ல் இருந்து 10 வரை உள்ள மனைகள் அனைத்தும் சர்வே எண் 862-ல்
அமைந்திருக்கிறது. வருவாய்த்துறை பதிவேட்டின்படி இந்த சர்வே எண் layout
போட்ட உரிமையாளர் பெயரில் தான் இருக்கும். இப்பொழுது, 5.5 சென்ட் அல்லது
2396 சதுர அடி (தோராயமாக ஒரு கிரவுண்ட்), மனை எண். 7ன் உரிமையாளர்
வருவாய்த்துறையில் உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பம் செய்கிறார்.
இப்பொழுது 862 சர்வே எண்ணின் மொத்தம் அளவான 1 ஏக்கர் 10 சென்டானது
இரண்டாக பிரிக்கப்படுகிறது. 5.5 சென்ட் அளவு கொண்ட மனை எண்.7 ஒரு
பிரிவாகவும் மீதமுள்ள 1 ஏக்கர் 4.5 சென்டுள்ள இடம் lay out
உரிமையாளருக்கும் என பிரிக்கப்படுகிறது. இப்பொழுது சர்வே எண்.862 இரண்டு
பகுதி 862/1 மற்றும் 862/2 என பிரிக்கப்படுகிறது. சர்வே எண். 862/1 - 1
ஏக்கர் 4.5 சென்ட் layout உரிமையாளர் பெயரிலும் சர்வே எண். 862/2 - 5.5
சென்ட் அளவு கொண்ட மனை எண். 7-ன் உரிமையாளருக்கும் இரண்டு பட்டாக்களாக
வழங்கப்படுகிறது. 862 சர்வே எண் அடங்கி உள்ள மனைகளை 10 பேர் வாங்கி
இருந்தாலும் 7-ஆவது மனை எண் உரிமையாளருக்கு மட்டும் பட்டா வினியோகித்த
காரணத்தினால் அவருக்கு சொந்தமான 5.5 சென்ட் மட்டும் உட்பிரிவு
செய்யப்பட்டு FMB -ல் குறிக்கப்பட்டு தனிப்பட்டா வழங்கப்படுகிறது. மீதி
உள்ள 9 பேர் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யாததால் 862 -ல் மீதமுள்ள அளவு 1
ஏக்கர் 4.5 சென்ட் நிலம் layout போட்ட உரிமையாளரின் பெயரில் தான்
இருக்கும்.

இப்பொழுது சில நாட்கள் கழித்து 5.5 சென்ட் அளவு கொண்ட மனை எண் 10,
நிலத்தின் உரிமையாளர் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்கிறார். இப்பொழுது
layout உரிமையாளரின் பெயரில் புதிதாக கொடுக்கப்பட்ட சர்வே எண் 862/1-ன்
விஸ்தீரணம் 1 ஏக்கர் 4.5 சென்ட் திரும்பவும் உட்பிரிவு செய்யப்பட்டு
இரண்டாகப் பிரிக்கப்பட்டு சர்வே எண் 862/1A - 99 சென்ட் என layout
உரிமையாளர் பெயரிலும் சர்வே எண் 862/1B - 5.5 சென்ட் அளவு கொண்ட மனை எண்.
10- ன் உரிமையாளரின் பெயரில் இருக்கும்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தனித்தனியே பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் போது
அந்த இடம் அடங்கியுள்ள சர்வே எண் ஒவ்வொரு முறையும் உட்பிரிவு
செய்யப்படுகிறது. ஒருவருக்கு சர்வே எண்.862/2 எனவும் இன்னொருவருக்கு
862/1A1A1A1 எனவும் இருக்கும். இப்படி பல முறை உட்பிரிவு செய்வதால் சர்வே
எண்ணிலும் குழப்பம் ஏற்படுகிறது. இப்படி உட்பிரிவு செய்வதற்கு தாலுக்கா
அலுவலகத்தில் பல ஊழியர்கள் ஈடுபட வேண்டியிருக்கிறது.

நாம் வாங்கும் மனை எந்தெந்த சர்வே எண்களில் வருகிறது என்பது,
கிரயப்பத்திரத்தில் தவறில்லாமல் குறிப்பது மிகவும் முக்கியம்..

(எடுத்துக்காட்டு): கூடுவாஞ்சேரியில் ஒரு Layout -ல் ஒருவர் வீட்டுமனையை
வாங்குகிறார். அந்த Layout மொத்தம் ஆறு சர்வே எண்களை கொண்டது. இவருடைய
மனை சர்வே எண்.322 மற்றும் 329-ல் வருகிறது. ஆனால் கிரயப்பத்திரம்
செய்யும் போது சர்வே எண்.329 -க்கு பதிலாக அதே Layout -ல் உள்ள இன்னொரு
சர்வே எண்.330 என தவறாக குறிப்பிட்டு விட்டார்கள். இடம் வாங்குபவருக்கு
அவருடைய மனை எந்தெந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது என தெரிய
வாய்ப்பில்லை. கிரயப்பத்திரத்தை வைத்து வட்டாட்ச்சியர் அலுவலகத்தில்
விண்ணப்பம் செய்கிறார். சில நாட்கள் கழித்து வட்டாட்சியர் அலுவலகத்தில்
FMB-யை வைத்து சரி பார்க்கும் போது இவருடைய மனை அமைந்திருப்பது சர்வே
எண்.329 என கண்டுபிடிக்கப்பட்டது. மனை வாங்கியவருக்கு இந்த விவரம்
தெரிவிக்கப்பட்டு பிழைதிருத்தம் பத்திரம் பதிவு செய்து கொண்டு வருமாறு
கோரப்படுகிறது. அவரும் அந்த Layout விற்பனை செய்த நிறுவனத்தைத் தேடிச்
செல்கிறார். அந்த நிறுவனம் மூடப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் இப்பொது
முழுவதுமாக இயங்கவில்லை என்ற செய்தி கிடைக்கிறது. பிழைதிருத்தப் பத்திரம்
இல்லாமல் பட்டாவும் மாற்ற முடியாது. இப்போது செய்வதறியாமல் முழிக்கிறார்.

இதே போல் பட்டாவில் சொத்தின் அளவு ஏரில் (Ares) குறிக்கப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக நாம் வாங்கி இருக்கும் மனையின் அளவு 2400 சதுர அடி என
வைத்துக் கொள்வோம். அதை அப்படியே ஏரில் 2.23 என குறிப்பிட வேண்டும்.
ஆனால் பட்டாவில் 2.2 என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை அப்படியே
சதுர அடியில் மாற்றினால் 2.2 x 1076 = 2367.2 சதுர அடி தான். 2.2 க்கு
பிறகு 2.3, 2.4 என்று தான் கொடுக்கப்படும். 2.25 ஏர் என்று கொடுக்கப்பட
மாட்டாது. இப்படிபட்ட குளறுபடிகளும் இருக்கின்றன.

இப்படி பலமுறை உட்பிரிவு செய்வதால் பதிவுத்துறையிலும் அந்த சர்வே
எண்ணுக்கு குளறுபடிகள் ஏற்படுகின்றன.

மனை எண்.7-ன் உரிமையாளர் Sub division செய்து பட்டா வாங்கி விடுவதால்
862ஆம் சர்வே எண் இரண்டாக பிரிக்கப்பட்டு 862/1 மற்றும் 862/2 என
பிரிக்கப்படுவதை ஏற்கனவே பார்த்தோம். 862 என்ற சர்வே எண்ணுக்கு
உரிமையாளராக இருந்த Lay out உரிமையாளருக்கு இப்போது புது சர்வே எண்
கொடுக்கப்படுகிறது. அதாவது 862/1 என்பது இது அவருக்குத் தெரிவிக்கப்
படுவதில்லை. இப்போது வருவாய்த்துறை பதிவேடுகளில் 862 என்ற சர்வே எண்ணே
இல்லை. ஆனால் Lay out உரிமையாளர் இப்பொழுது தான் மனை எண். 9-ஐ விற்பனை
செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு சர்வே எண்.862/1 என புதிதாக
வருவாய்த்துறையில் மாற்றப்பட்டிருப்பது அவருக்குத் தெரியாததால் மனை
எண்.9-ஐ விற்பனை செய்யும் போது அது அமைந்துள்ள சர்வே எண்.862 என்று தான்
குறிப்பிடுவார். ஆனால் இது தவறு. இந்த முரண்பாட்டிற்கு யார் காரணம். இதை
எப்படி தவிர்ப்பது?

மேற்கண்ட குளறுபடிகளை தவிர்ப்பது எப்படி? மனை வாங்குபவர்கள் எளிய
முறையில் பட்டாவை பெற அரசாங்கம் என்ன செய்யலாம்?
பட்டாவில் பிளாட் நம்பரும் குறிக்கப்படுவதில்லை. ஒருவர் ஒரே Layout-ல்
மூன்று பிளாட்டுகள் வாங்கி அதற்கு பட்டாவும் வாங்கி விடுகிறார். மூன்று
பிளாட்டுகளும் ஒரே அளவாக இருக்கும் பட்சத்தில் பட்டாவில் குறிக்கப்படும்
அளவுகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க
முடிவதில்லை.

அதே போல் பட்டாவில் பிளாட்டின் அளவு ஏரில் குறிக்கப்படுவதால் பிளாட்டின்
சரியான அளவில் மாற்றம் ஏற்படுகிறது. சிலருக்கு சில சதுர அடிகள் குறையும்
மற்றும் சிலருக்கு சில சதுர அடிகள் அதிகமாகவும் கிடைக்கிறது.
எடுத்துக்காட்டாக அதாவது 2,500சதுர அடி அளவு கொண்ட பிளாட்டுக்கு 2.2 ஏர்
அதாவது 2367 சதுர அடி என குறிக்கப்படுகிறது. 33 சதுர அடி குறைவாக
குறிக்கப்படுகிறது. 4,370 சதுர அடி கொண்ட மனைக்கு 4.1 ஏர் அதாவது 4,412
சதுர அடி என கொடுக்கப்படுகிறது. 42 சதுர அடி அதிகமாக குறிக்கப்படுகிறது.
இதுவும் ஒரு குளறுபடி தான்.

அப்படியென்றால் பட்டாவில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க என்ன வழி
முறைகள்? இதை எப்படி சரி செய்ய முடியும்?

பட்டா சம்பந்தமான வழி முறைகளை அரசாங்கம் மாற்றி அமைத்தால் தவிர இந்த
குழப்பங்கள் தீராது.

பிளாட் விற்பனை செய்பவர்கள் அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்ற உடனேயே நேராக
பதிவுத்துறைக்குச் சென்று பிளாட்டுகளை பதிவு செய்து விற்பனை செய்ய
ஆரம்பித்து விடுகிறார்கள். எல்லா பிளாட்டுகளும் சரியான சர்வே எண்ணில்
தான் அமைகிறதா எனவும் சரி பார்ப்பதில்லை.

அரசாங்கத்தில் Layout போடுவதற்கு அங்கீகாரம் கிடைத்த உடன் அது விற்பனை
செய்யப்படுவதற்கு முன்பாகவே நேராக வருவாய்துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
அங்கு எல்லா பிளாட்டுகளும் சரியான சர்வே எண்களில் அமைகிறதா? என்று சரி
பார்க்கப்பட்டு எல்லா மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டு எல்லா
மனைகளுக்கும் புதிய சர்வே எண்ணுடன் பட்டா வழங்க வேண்டும். இந்த பட்டா
அனைத்தும் Layout உரிமையாளரின் பெயரிலேயே இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக பிளாட் எண்.1-ல் இருந்து 10 வரை சர்வே எண் 862-ல்
அமைகிறது. இது முதலிலேயே உட்பிரிவு செய்யப்படும் போது 862/1, 862/2,....
862/10 என உட்பிரிவு செய்யப்படும். தேவையில்லாமல் 862/1A1A1 மற்றும்
862/2BA1 என்பது போன்று சர்வே எண்கள் கொடுக்கப்படுவது தவிர்க்கப்படும்.
புதிய சர்வே எண்களும் குழப்பம் இல்லாமல் இருக்கும். மேலும்
வருவாய்துறையில் வேலைப்பளுவும் குறையும். Layout-ல் உள்ள மொத்த
பிளாட்டுகளுக்கும் ஒரே Sub division order மூலம் வேலை எளிதாக முடிந்து
விடும். பலமுறை Sub division செய்வதும் தவிர்க்கப்படுகிறது.

அதே போல் பிளாட்டின் அளவும் சதுர அடியில் கொடுக்கப்பட வேண்டும். இப்படி
செய்யும் பட்சத்தில் அங்கீகாரம் கொடுக்கப்படும் போது உள்ள மனைகளின்
அளவிற்கும் வருவாய்த்துறை பதிவேடுகளின்படி உள்ள அளவும் சரியாக இருக்கிறதா
என்று தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதனை
ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு வருவாய்துறையில் எல்லா
மனைகளும் உட்பிரிவு செய்யப்பட்டவுடன் அதன் முழு விவரங்களும்
பதிவுத்துறைக்கு உடனே அனுப்பப்பட வேண்டும். பதிவுத்துறையில் புதிய
உட்பிரிவுக்கு Guide line value நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்பு தான் பிளாட்டுகளை
விற்பனை செய்வதற்கு உரிமையாளருக்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட
வேண்டும்.

இப்போது பிளாட்டுகளை பதிவு செய்வதும் எளிது. ஒவ்வொரு பிளாட்டுக்கும் உள்ள
உட்பிரிவு செய்யப்பட்ட சர்வே எண் மற்றும் பட்டா எண்ணையும் குறிப்பிட்டே
பதிவு செய்யலாம். புதிய உட்பிரிவுடன் பதிவு செய்யப்படுவதால் அதனால்
ஏற்படும் குழப்பங்களும் தீர்ந்து விடும். மேலும் பிளாட் வாங்கியவர்
இப்போது வருவாய்த்துறையில் தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்தால்
போதும்.

பட்டாவில் தீர்வை மதிப்பு 10 பைசா, 20 பைசா எனவும்
குறிப்பிடப்பட்டிருக்கும். 10 பைசா செல்லுபடி ஆகாத காலத்திலும் இப்படி
குறிப்பிடுவதை மாற்ற வேண்டும்.

Layout-ல் பிளாட் வாங்கும் ஒருவருக்கு, பிளாட் எண்ணையும் குறிப்பிட்டு
பட்டா வழங்குவது நல்லது.

மேலும் உரிமையாளர் பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போது புகைப்படம் ஒன்று
பெறப்பட்டு அதை scan செய்து புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கலாம்.

மேற்கண்ட மாற்றங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்
பட்டாவினால் ஏற்படும் குளறுபடிகளையும், மோசடிகளையும் தவிர்க்கலாம்

Property Buying plan

எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும் என்று கூறுவார்கள். எலிக்கே தனி வளை
வேண்டும் என்று எண்ணும் போது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மறைந்துள்ள
இன்றைய காலக்கட்டத்தில் தனி வீடு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
அவசியமாகின்றது.. பொதுவாக, ஒருவர் புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களின்
குடும்பம் மற்றும் வேலையை விசா¡¢த்தவுடன் அடுத்ததாக கேட்கும் கேள்வி
சொந்தவீட்டில் இருக்கிறீர்களா? அல்லது வாடகை வீட்டில் இருக்கிறார்களா ?
வாடகை வீட்டில் இருந்தால் அடுத்தாக வீடு கட்ட இடம் வாங்கி இருக்கிறீர்கள்
என்று கேட்பார்கள். சொந்த வீடு அல்லது சொந்த இடம் என்பது மக்களிடையே
தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

எல்லோருக்குமே சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
சிலபேர் நிலம் முதலில் வாங்கி வைத்து பின்பு வீடு கட்டலாம் என்ற
எண்ணத்தில் இருப்பார்கள்.

பணம் சிறிது சேர்த்தவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுவது நிலம் அல்லது வீடு
வாங்கும் எண்ணம் தான். சொந்த இடம் அல்லது வீடு இருந்தாலே சமுதாயத்தில்
நல்ல அந்தஸ்து இருக்கிறது என்று பெருமைப்படுபவரும் உண்டு. வாடகைக்குப்
பெரும் பணம் செலவழிப்பதற்குப் பதிலாக சொந்த வீடு இருந்தால் அதை
மிச்சப்படுத்தலாம் என்று எண்ணுவோர்களும் உண்டு. நிலம் அல்லது வீடு
வாங்குவதை சிறந்த முதலீடாக நினைப்பவர்களும் உண்டு. நிலம் வாங்கும் எண்ணம்
இல்லாதவர்கள் கூட தொ¢ந்தவர்கள் இடம் வாங்குகிறார்கள் என்றால் அதன்
அருகிலேயே வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து இடம் வாங்குவோரும் உண்டு.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அதாவது மேற்படிப்பு, கல்யாணம்
போன்றவற்றிற்குப் பயன்படும் என்று நிலம் வாங்குவோரும் உண்டு. பணம் இல்லாத
நிலையில் கூட வங்கியில் கடன் பெற்று வீடு அல்லது இடம் வாங்குவோரும்
உண்டு.

இப்படி பல காரணங்களுக்காக நிலம் அல்லது வீடு வாங்குபவர்களில் பலருக்கு
அதை எப்படி வாங்குவது, பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள்
தொ¢வது இல்லை. எந்தக் காரணத்திற்காக இடம் வாங்குகிறார்களோ அது நிறைவேறும்
வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்வதும் இல்லை. அக்காரணம்
நிறைவேறாத சமயத்தில் பணத்தை இழப்பதுடன் நிம்மதியும் போய் விடுகிறது. அதிக
மக்கள் ஏமாந்தும் போய் விடுகிறார்கள்.

நிலம் வாங்கும் போது நாம் எதற்காக வாங்குகிறோம் என்பதை முதலில் முடிவு
செய்யவேண்டும்.

1. வீடு கட்ட
2. முதலீடு செய்ய
3. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு

இந்த மூன்றுக்கும் ஏற்றாற்போல் தான் நாம் நிலம் வாங்க வேண்டும். கையில்
பணம் இருக்கிறது என்பதற்காக கண் மூடித்தனமாக எந்த வித குறிக்கோளும்
இல்லாமல் இடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.


1.வீடு கட்ட

வீடு கட்டுவதற்கு நாம் நிலம் வாங்குவதாக இருந்தால், நல்ல சாலை,
போக்குவரத்து, குடிநீர் வசதி, கடைகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற
அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். நாங்கள் இப்போது
வீடு கட்டவில்லை இன்னும் சிறிது காலம் கழித்து தான் வீடு கட்டப் போகிறோம்
என்று நினைத்து இடம் வாங்குபவர்கள், எவ்வளவு காலத்தில் வீடு கட்ட
போகிறோம்? அதற்குள் மேற்கண்ட அடிப்படை வசதிகள் வருவதற்கு வாய்ப்புகள்
இருக்கிறதா என்பனவற்றை தொ¢ந்து கொள்ள வேண்டும். நாமாகவே புறச் சூழலை
தீர்மானித்து வீடு கட்டுவதற்கு இடம் வாங்கக் கூடாது.

2. முதலீடு செய்வதற்கு

முதலீடு செய்வதற்காக நிலம் வாங்குவதாக இருந்தால் அந்த இடம் வளர்ச்சி அடைய
என்னென்ன வழி முறைகள் இருக்கிறது, அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
முதலியவைகளை பற்றி தொ¢ந்து கொள்ள வேண்டும். முதலீட்டுக்காக இடம்
வாங்குவோர் செய்யும் மிகப் பொ¢ய தவறு மற்றவர்கள் சொல்வதை வைத்து இடத்தின்
மதிப்பு வெகுவாக கூடிவிடும் என்று தவறாகக் கணக்கிடுவது தான்.

பொதுவாக Layout போட்டு விற்பனை செய்பவர்கள் வியாபார நோக்குடன்
அரசாங்கத்தின் பல திட்டங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்
முதலியன அந்த பகுதியில் வர இருக்கிறது என்று சொல்லி விளம்பரப்
படுத்துவார்கள். அதையெல்லாம் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தனியார்
தொழிற்சாலையோ அல்லது கல்லூ¡¢யோ வந்து விட்டால் மட்டும் அந்த பகுதி
முன்னேற்றம் அடைந்து விடாது. நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதன்
அருகிலேயே குடியிருக்க வீடு கட்ட வேண்டும் அல்லது அந்த நிறுவனமே
அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் பட்சத்தில் தானாகவே மற்ற அடிப்படை
வசதிகள் வரத் தொடங்கிவிடும். இதனால் அந்த இடம் வளர்ச்சி அடைய ஆரம்பித்து
விடும். பெரும்பாலான நிறுவனங்களில் வேலைக்குச் செல்பவர்கள் அவர்களுடைய
நிறுவனத்தின் பேருந்துகளில் தாங்கள் வேலை செய்யும் இடத்துக்குச் சென்று
விடுவர். மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூ¡¢ பேருந்துகளில் படிக்கும்
இடத்திற்கு சென்று விடுகிறார்கள். இதனாலேயே மட்டும் அந்த இடம் வளர்ச்சி
பெற்று விடாது. அந்த இடத்தில் உள்ள மனைகள் வீடுகளாகும் போது தான் அந்த
இடம் வளர்ச்சி அடையும்.

3. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நிலம் வாங்குபவர்கள் குழந்தைகளின்
மேற்படிப்புக்கு அல்லது திருமணத்திற்காக வாங்குவார்கள். இந்த அம்சத்தில்
ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இருப்பதால், அக்காலத்திற்குள் நிலத்தின்
மதிப்பு உயர்ந்து விடுமா? என்பதைத் தீர ஆராய்ந்து வாங்க வேண்டும்.


உண்மையான விலை ஏற்றம் இருக்கிறதா என்று நன்கு விசா¡¢த்துக் கொள்ள
வேண்டும். பல இடங்களில் செயற்கையான விலை ஏற்றத்தையே காண முடிக்கிறது.
நிலம் வாங்கிய ஒருவர் அந்த பகுதியில் ஏதாவது தொழிற்சாலை அல்லது கல்வி
நிறுவனம் வருகிறது என்று தொ¢ந்த உடன் அந்த பகுதியில் உள்ளவா¢டம் மட்டுமே
விசா¡¢த்து, அவர்கள் சொல்லும் விலையை வைத்து நல்ல முன்னேற்றம் அடைந்து
விட்டதாக நினைக்கிறார். உடனே தமக்கு தொ¢ந்தவர்களிடம் இந்த விலை ஏற்றத்தை
குறிப்பிட்டு அவர்களையும் வாங்க சொல்லி பா¢ந்துரை செய்கிறார். இப்படி
இன்னொருவர் வாங்க ஆரம்பித்த உடனே அங்கு உள்ள சிலரால் அந்த இடத்தின்
மதிப்பு கூடிவிட்டது என்று பேசப்படுகிறது. இது இப்படியே பரவி பலபேர்
அங்கு முதலீடு செய்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எந்த
வித அடிப்படை வசதிகளும் வராமல் இருக்கும் பட்சத்தில் விலை ஏற்றம் நின்று
போய் சா¢வு ஏற்படுகிறது.

முதலீடு அல்லது குழந்தைகள் வளர்ச்சிக்காக நிலம் வாங்குபவர்கள் இரண்டு
அம்சங்களில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

1. இடம் வாங்குவது

2. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதிக விலைக்கு விற்பது

இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள இரண்டு முக்கியமான காரணிகளை மறந்து விடுகிறார்கள்.

1. பாதுகாப்பது
2. பராமரிப்பது

இந்த இரண்டைப் பற்றியும் பலருக்கு விவரம் தெரிவதில்லை. நிலத்தை
வாங்குவதிலும் அதனை அதிக விலைக்கு விற்பதிலும் காட்டும் வேகத்தை அதனைப்
பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் காட்டுவதில்லை.

அதனால்தான் நிலத்தின் உரிமையாளர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க
நேரிடுகிறது. சில சமயம் சொத்துக்களை இழக்கவும் நேர்கிறது.

---------------

http://www.selvaganeshconstructions.com/land_documents.html


LAND MEASUREMENT

Land can be measured in terms of following units as Centimeters, Meters , Inches, Feet, Cents, Grounds, Acres, which a normal person uses. Where as surveyor uses the terms like Links, Chains, Rods, Ares, and Hectares etc….

Few Examples of Conversion:

100 cents 1 acre
18.5 grounds 1 acre
5.5 cents 1 ground
435.6 sqft 1 cent

100 acres

1 hectare

2.47 cents

1 are

CLASSIFICATION OF LAND

Land can be classified and divided into various types as

  • Patta land
  • Puramboke
  • Pathway
  • Idukadu
Whereas we are going to deal only with patta land.

Patta:

Patta is basically revenue record patta land is said to be the private property for which individual obtains a authentication from the government called as patta.

Information in patta

  • Patta no
  • Survey number with sub division
  • Village
  • Taluk
  • District
  • Property owner name with his fathers name
  • Nanja / punja
  • Extent in ares / hectares

Chitta:

  • Extract of patta is chitta
  • Patta no
  • Survey number with sub division
  • Village
  • Taluk
  • District
  • Property owner name with his fathers name
  • Nanja / punja
  • Extent in ares / hectares

Adangal:

In this type of vegetation is mentioned

  • Patta no
  • Survey number with sub division
  • Village
  • Taluk
  • District
  • Property owner name with his fathers name
  • Nanja / punja
  • Extent in ares / hectares

FMB:

Fmb is abbreviated as field measurement book, which is taken by the government surveyor while measuring the field, in the FMB the details of survey no and its subdivision for individual survey numbers are provided. When combined together forms a village plan.

A - Register:

A register is government record in which the classification of land is provided for each and every survey numbers with their extent. The information in a register are survey number and its sub division, patta number classification, extent in Ares / hectares.

Village Plan:

Village plan is the plan show in the entire view of the particular village no i.e. all the FMB for separate survey numbers are merged together, which also shows the adjacent villages, information like road lakes, ponds, etc are mentioned.

VAO Certificate:

VAO certificate is given by the village administration officer of that particular village for various reasons like.

  • Road access
  • Death & legal heir certificate
  • Possession of land
  • No acquisition in the property
  • Chitta copy
  • Adangal copy

Kist Receipt:

Kist receipt is said to be the tax receipt, receipt which is given by the VAO for the land.


E.C (Encumbrance Certificate):

EC is the certificate which is used to see whether the property is registered, mortgaged etc that is in a word it is used to check whether the property is free from any encumbrances.

  • Applicant name (who apply it)
  • Ec no
  • Ec date
  • Village name
  • Sub register office(register office in which it is applied)
  • Plot no
  • Survey no
  • Extent of area
  • Boundaries
  • Period from which to which
  • Entries of the document if any
  • Document no with date
  • Executants name
  • Purchaser name
  • Value of the property
  • Boundaries of the property register
  • No of entries

Sale Deeds:

A property is registered by means of a sale deed document, the information which are provided in the sale deed are

  • Stamp paper in the name of purchaser/ vendor with date
  • Vendor details
  • Purchaser details
  • Property details
  • History of the property
  • Guideline value
  • Total extent as schedule “A” property
  • Conveyed extend as schedule “B” property
  • Layout plan is enclosed
  • Signature of the vendor / purchaser on all pages
  • In The Rear Side Of The First Page
  • Sub register office seal mentioning document no ,pages, volume ,date of execution are mentioned
  • Shortage of stamp paper can be paid by cash which is endorsed by section 41 seal
  • Photo of vendor & purchaser should be affixed
  • Witness signature of 2 persons are entioned
  • Thumb impression of purchaser & vendor are endorsed
  • Date of registration and page number seal is enclosed in all page

Special Power Of Attorney:

The purpose of special power of attorney is that the executants signs all the deeds i-e, in stamp paper vendor/purchaser place is signed by the person who executed the power deed & only the register office formalities is done by the special power agent the power agent photo is to be affixed in the sale deed where he has to sign power will not to be reflected in the EC.

General Power Of Attorney:

In this the power agent acts on behalf of the purchaser or the vendor and executes the sale deed on his self by signing in all the deeds and in register office documents, power will not be reflected in the EC.

Mortgage deed:

If any property is pledged in bank or to any individual person that deed is said to be mortgage deed, this deed will reflect in the EC.

Release deed:

Ones the mortgage deed is released it can be obtained by released it can be obtained by release deed or clearance certificate from the person who mortgaged it.

Nri”s Power Of Attorney:

If any person in foreign who is going to buy or sell a property he can nominate a person as his power agent, in that case the power of attorney should be notarized by the foreign embassy o legal attorney of that country (which he/she resides) and after that it should be adjudicated in concerned SRO , in Chennai.

Copy of the Document:

If any document is unfound or if we require additional copy of the particular document we can apply in the concern SRO for the same which is also said to certificate copy .i-e.

  • If the document is lost a police compliant should be given and public notice to be published by advocate ,if no intimation /information with 21 days the copy document can be treated as original document
  • In case of more than two person purchases the property they can have separate copy document

Partition Deed:

Settlement can be done between the family members are husband, wife, brothers, sisters etc any blood relations

Gift Deed:

If the property is gifted to any one without any consideration it is conveyed by a deed known as gift deed.

Examples: in an approved layout the roads, parks, etc should be gifted to the particular village president that is conveyed by a way of gift deed. No fees for the deed.

Will:

The property of a person can be shared and conveyed to his heris by way of WILL, it may be either registered or UN registered one will should be enforced after the demise of the executants.

Death Certificate:

This is used for the purpose of ancestral property execution in our case ,it should be provided by the corporation commissioner, thasildar, municipality officer.

Legal Heir Ship Certificate:

This is also used for the purpose of ancestral property execution in our case it should be provided by the corporation commissioner, thasildar, municipality officer.

NOC (No Objection Certificate):

No objection certificate is given by the heirs who are not included in the sale deed stating that they have no objection in selling their father /mother property if they a share in the property.

Classification Of Approval:

Approval can be classified as follows

CMDA & DTCP and panchyath

Layout approval- if more than 24 cents
Sub division layout approval-if less than 24 cents

Patta - Chitta - Adangal - Saledeed

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது
தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது
மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள்
தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து
தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண்
(Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை

2. வருவாய்த்துறை

அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :

நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :

இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.

a. பட்டா (Patta)
b. சிட்டா (Chitta)
c. அடங்கல் (Adangal)
d. அ' பதிவேடு ('A' Register)
e. நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)


a. பட்டா (Patta) :

நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-

1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

b. சிட்டா (Chitta) :

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

c. அடங்கல் (Adangal) :

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

d. அ' பதிவேடு ('A' Register) :

இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

e. நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :

நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி 4.
புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு
வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம்
எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண
எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால்
குறிக்கப்பட்டிருக்கும்

ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக்
கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு
சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன்
முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும்
1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின்
எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத்
தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர்
அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல்
தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும். சார்பதிவாளர் அலுவலகத்தில்
இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள்.
அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17
ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை
பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு
பெயர் Guide line value . நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர்
Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப்
பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல்
செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க
முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு
மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். இதற்கு 41 என்ற
படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத்
தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி
செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப்
பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய
வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக
செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand
Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற
விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில்
குறிக்கப்பட்டிருக்கும். பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து
(1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது
சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம்
வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு
பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம்
சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம்
இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள
அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு
கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய
பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின்
புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய
கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல்
சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன்
பதிவு நிறைவு பெறும். பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர்
மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர்
பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு,
இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக்
கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால்,
இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம்
செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை
சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு
விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று
ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை
பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide
line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை
நிர்ணயம் செய்வார். Guide line value சரியாக இருக்கிறது என்று அவர்
முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த
மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது
அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும்
உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம்
பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு
என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர்
அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது
அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம்
அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.

போலி பத்திரம்

போலி பத்திரம்

போலி பத்திரத்தின் மூலம் மோசடிகள் நடக்கின்றன என்ற செய்திகள் அடிக்கடி
வந்து கொண்டிருக்கின்றன.

2006-ஆம் ஆண்டுக்கு முன்பெல்லாம் பத்திரப்பதிவின் போது சொத்து வாங்குபவர்
மற்றும் விற்பவர் இருவருடைய கையெழுத்து மற்றும் கைரேகை மட்டும் போதும்
என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில் போலி பத்திரங்கள் தயாரிப்பது எளிதாக
இருந்தது. அதை தடுப்பதற்கு 2006-ஆம் ஆண்டு முதல் தான் பத்திரப்பதிவின்
போது சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருடைய புகைப்படம் ஒட்டும்
முறையும் ID வைத்து உறுதி செய்யும் முறையும் அமுலுக்கு வந்தது.
இருந்தாலும் போலி பத்திர மோசடிகள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன.

போலி பத்திரத்தை தயார் செய்வது எப்படி?

போலி பத்திரம் தயார் செய்பவர்கள் அதிக நாள் எவராலும் பராமரிக்கப்படாத
இடம், யாரும் வந்து பார்வை இடாத இடம் போன்ற இடங்களைத் தான் முதலில்
தேடுகிறார்கள். அந்த நிலத்தின் உரிமையாளரின் பெயர், சர்வே நம்பர் போன்ற
விவரங்களை தெரிந்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தின் நகலை
பெற்று விடுகிறார்கள். அதன் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து கீழ்கண்ட
முறையில் போலி ஆவணங்கள் தயார் செய்கிறார்கள்.

1. அதே போன்று பத்திரத்தை தயார் செய்வது முதல் முத்திரைத்தாளின் பின்
பக்கம் பதிவு விவரங்கள், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் கைரேகை,
கையொப்பம் வரை இவர்களே போட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது
போன்றே ஒரு போலியான ஒரு புதிய கிரயப்பத்திரத்தை உருவாக்கலாம்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இடப்படும் முத்திரை முதற்கொண்டு போலியானதாக
இருக்கும். இப்படி ஏமாற்றுபவர்கள் அவ்வப்போது முத்திரைதாள்களை வாங்கி
வைத்திருப்பார்கள்.

2. சொத்து யார் பெயரில் இருக்கிறதோ அதே பெயரைக் கொண்ட ஒருவர் தெரிந்த
இன்னொருவருக்கு விற்பது போல சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து
விடுவார்கள். இது சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டிருந்தாலும் விற்றவர் உண்மையான சொத்தின் உரிமையாளர் இல்லை
என்பதால் இதுவும் போலி பத்திரம் தான். இந்த பத்திரத்தின் படி சொத்தை
வாங்கியவர் போலியான புதிய உரிமையாளர் ஆகி விடுகிறார். இப்போது சொத்தை
அடுத்தவருக்கு விற்பது அவர்களுக்கு எளிமையாக இருக்கிறது.

3. சொத்தின் உரிமையாளர் தன்னை Power of attorney-ஆக நியமித்திருக்கிறார்
என்று ஒரு போலியான Power of attorney-யை தயார் செய்து அதை வைத்து சொத்தை
தெரிந்த இன்னொருவருக்கு விற்பது போல சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்து விடுவார்கள். சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of attorney
கொடுக்கப்பட்ட பத்திரத்தைப் பார்[பதில்லை என்பது இவர்களுக்குச்
சாதகமாகிவிடுகிறது.

EC apply செய்து பார்க்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் விற்றவர்,
வாங்கியவர் பெயர்கள் மற்றும் கிரயப்பத்திர நம்பர், ஆண்டு முதலியவற்றை
வைத்து உண்மையை கண்டறிய முடியாது. ஏனெனில் போலி பத்திரம் செய்பவர்கள்
உண்மையான பத்திரத்தில் உள்ள விவரங்களை அப்படியே ஒரு பிழையில்லாது போலி
பத்திரத்தில் கொடுத்து விடுகிறார்கள்.

போலி பத்திரத்தை பார்த்து அது original என எண்ணி பலரும் ஏமாந்து விடுகிறார்கள்.

போலி பத்திரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத போலி பத்திரங்களைக் கண்டு
பிடிப்பது எளிது. அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்
விவரங்களை வைத்து இந்த சொத்து எந்தச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு
செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்து பெற
வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது போலி பத்திரம் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.

போலி பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் விவரங்கள் சரியாக இருந்தாலும்
முத்திரைத்தாள் வாங்கிய தேதி மற்றும் முதல் முத்திரைத்தாளின் பின்பக்கம்
குறிக்கப்பட்டிருக்கும் பதிவு விவரங்கள் ஆகியவற்றில் உள்ள வித்தியாசங்களை
வைத்து எளிதில் அடையாளம் கண்டு விடலாம். ஆனால் சொத்தின் உரிமையாளர்
அல்லாத ஒருவரால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு
தயாரிக்கப்பட்ட போலி பத்திரத்தை கண்டு பிடிப்பது கடினம். இது பதிவு
செய்யப்பட்டிருப்பதால் நாம் நகல் பெறும் போது அதே copy தான் கிடைக்கும்.
ஆனால்

அந்த சொத்தின் மூலப்பத்திரங்களை வைத்து ஓரளவு கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக சொத்தின் உரிமையாளர்களிடம் சொத்து சம்பந்தமான மூலப்பத்திரங்களின்
original அனைத்தும் இருக்கும். அதை சொத்தை விற்பவர்கள்
வைத்திருக்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சொத்தின் உரிமையாளர் அல்லாத ஒருவரால் சார்பதிவாளர் அலுவலகத்தில்
சொத்து பதிவு செய்வதை தடுப்பது எப்படி?

தற்போதைய முறைப்படி சொத்து பதிவின் போது சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு ID-யை வைத்து அவர்களை உறுதி
செய்தாலும், சொத்தின் உண்மையான உரிமையாளர்கள் இவர்கள் தான் என்பதை உறுதி
செய்த பின்னரே சொத்தை பதிவு செய்யலாம் என்னும் முறை அமுலுக்கு வந்தாலே
இது போன்ற போலி பத்திரங்கள் மூலம் சொத்தைப் பதிவு செய்வதைத் தடுக்கலாம்.
சொத்தை விற்கும் ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர்தான் சொத்தின்
உரிமையாளர் என்பதற்கான சான்றுகளை கொடுக்க வேண்டும். அவர் சொத்து வாங்கிய
கிரயப்பத்திரத்தின் original மற்றும் வருவாய்த் துறையினரால்
கொடுக்கப்படும் பட்டா போன்றவற்றை சரிபார்த்த பின்னரே சார்பதிவாளர் அந்த
சொத்தைப் பதிவு செய்ய வேண்டும். இப்போது வழங்கப்படும் computer
பட்டாக்ககளில் சொத்தின் உரிமையாளரின் புகைப்படம் கொடுக்கப் படுவதில்லை.
புகைப்படத்துடன் கூடிய பட்டாக்கள் வந்தால் இது போன்ற மோசடிகளைத்
தவிர்ப்பது இன்னும் எளிதாக இருக்கும்.

தாய் பத்திரம்

தாய் பத்திரம்

சொத்து வாங்கிய உடனேயே சிலர் அந்த சந்தோஷத்தில் தாய் பத்திரங்களை
விற்பனையாளரிடமிருந்து வாங்க மறந்து விடுகிறார்கள். இதில் பல பேர் ஒரு
Lay out-ல் வீட்டு மனையை வாங்குபவர்கள் தான். Lay out-ல் வீட்டு மனை
வாங்கும் எல்லோருக்கும் original தாய் பத்திரம் கொடுக்க முடியாது
என்பதினால் அவர்களுக்கு நகல் மட்டுமே Lay out விற்பவரால் கொடுக்கப்படும்.
அதை நாம் கிரயப்பத்திரம் பதிவு செய்யும் அன்றே வாங்கி விட வேண்டும்.

அரக்கோணம் அருகில் ஒரு Lay out-ல் வீட்டு மனை ஒன்றை ஒருவர் 2005-ஆம்
வருடம் வாங்குகிறார். பத்திரப்பதிவு முடிந்த பிறகு கிரயப்பத்திரத்தை
மட்டும் வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்கிறார். 5 வருடங்கள் கழித்து
வருவாய்த்துறையில் பட்டா வாங்க நினைக்கும் போது அதற்கு தாய்பத்திரம்
தேவைப்படுகிறது. தனக்கு வீட்டு மனை விற்பனை செய்த நிறுவனத்தின்
அலுவலகத்திற்கு சென்று பார்க்கும் போது அந்நிறுவனம் அங்கிருந்து காலி
செய்து 3 ஆண்டுகள் ஆகின்றன என்ற செய்தி கிடைக்கிறது. ஆனால் எங்கு மாறி
சென்றிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை. பொதுவாக
கிரயப்பத்திரத்தில் யார் யாரிடமிருந்து மாறி வந்தது என்ற விவரங்கள்
குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்து அதற்கு முந்தைய கிரயப்பத்திரத்தின்
நகலை பெறுகிறார். அந்த கிரயப்பத்திரத்தில் இருந்து எந்த விவரங்களும்
கிடைக்கவில்லை. இப்போது அவரால் பட்டாவை மாற்ற முடியவில்லை. இந்த வீட்டு
மனையை விற்பனை செய்தது ஒரு Real estate நிறுவனம் என்பதால் அவர்கள்
சொத்தின் உரிமையாளரிடம் Power of attorney வாங்கி அதை வீட்டு மனைகளாகப்
பிரித்து விற்பனை செய்து இருக்கிறார்கள். வருவாய்த்துறையின்
பதிவேட்டின்படி சொத்தின் உரிமையாளர் பெயா¢லும் பட்டா இல்லை. அதற்கு
முன்பு சொத்தை வைத்திருந்தவர் பெயரில் பட்டா இருக்கிறது. இது சம்பந்தமான
தாய் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் பட்டா மாற்றம் செய்ய முடியாமல்
தவிக்கிறார்.